எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி ஜூன் - 15 - பெரியகுளத்தை சேர்ந்த பெண்ணுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக டீன் மதிவாணன் தெரிவித்தார். தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் வீராச்சாமி கூலித்தொழிலாளி. இவருக்கும் செல்லம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் செல்லம்மாள் கருவுற்று பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் சாந்தாவிபலா பிரசவம் பார்த்தார். செல்லம்மாளுக்கு முதல் பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் சுகப்பிரசவத்தில் பிறந்தது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு கிலோ 700 கிராம் இருந்தது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும் டீன் மதிவாணன் தெரிவித்தார். செல்லம்மாளுக்கு முதல் பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்ததையடுத்து கணவரும், உறவினர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


