Idhayam Matrimony

தேனிஅரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் 3 குழந்தைகள்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி ஜூன் - 15 - பெரியகுளத்தை சேர்ந்த பெண்ணுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக டீன் மதிவாணன் தெரிவித்தார். தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் வீராச்சாமி கூலித்தொழிலாளி. இவருக்கும் செல்லம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் செல்லம்மாள் கருவுற்று பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் சாந்தாவிபலா பிரசவம் பார்த்தார். செல்லம்மாளுக்கு முதல் பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் சுகப்பிரசவத்தில் பிறந்தது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு கிலோ 700 கிராம் இருந்தது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும் டீன் மதிவாணன் தெரிவித்தார். செல்லம்மாளுக்கு முதல் பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்ததையடுத்து கணவரும், உறவினர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago