எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் ஐ.சி.சி. கூட்டத்தில் ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அகாரிகபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 18-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ம் தேதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு முறை ஐ.சி.சி. இதுகுறித்து முடிவு எடுக்க முடியாமல் அதிகாரபூர்வ அறிப்பை ஒத்தி வைத்தது.
இதற்கிடையில் தற்போதுள்ள சூழ்நிலையில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டிருந்தது. ஐ.பி.எல். குறித்து முடிவு எடுக்க முடியாத அளவிற்கு ஐ.சி.சி. தலைவர் ஷசாங்க் மனோகர் தடைபோட்டு வருவதாக பி.சி.சி.ஐ. அதிகாரிகள் குற்றம்சாட்டினர். ஷசாங்க் மனோகர் கடந்த வாரம் தனது பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் ஐ.சி.சி. கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. அப்போது டி20 உலக கோப்பையை தொடரை ஒத்திவைப்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அவர்கள் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒயிட்பால் கிரிக்கெடிற்கு தயாராகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு உறுதியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |