எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை. இன்று முதல் எவையெல்லாம் இயங்கலாம். எவற்றுக்கெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற விபரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி டீக்கடைகள், ரெஸ்டாராடெண்டுகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆட்டோக்களும், ரிக்சாக்களும் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 188-க்கும் மேலான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் இதுவரை 9 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த நோய்த் தொற்று மக்களை படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மார்ச் 22-ம் தேதி ஒரு நாள் ஊரடங்கை அறிவித்தார்.
அதன் பிறகு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அடுத்தடுத்து பலமுறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் வரும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, மதுரையில் இந்த முழு ஊரடங்கு கடந்த சில நாட்களாக அமலில் இருந்து வந்தது. மதுரையில் முதலில் 12-ம் தேதி வரை அமலில் இருந்த முழு ஊரடங்கு பிறகு மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு நேற்று வரை அமலில் இருந்தது.
இந்நிலையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று மதுரை மக்கள் ஆவலோடு அந்த கேள்விக்கு விடையை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை.
இன்று 15-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் எவற்றுக்கெல்லாம் அனுமதி, எவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை என்ற விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மதுரை கலெக்டர் டி.ஜி.வினய்க்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தளர்வுகள் என்னென்ன?
இன்று 15-ம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
1. ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், சிறிய மசூதிகள், தர்ஹாக்கள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்றை கருதி சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சிகள், நகரசபைகள், பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை.
2. அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதியுடன் தொடர்புடைய ஆலைகளுக்கு 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.
3. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
4. அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
5. அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள்(நகை மற்றும் ஜவுளி கடைகள்) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் குளிர்சாதனை வசதிக்கு அனுமதியில்லை. ஷாப்பிங் மால்களுக்கும் அனுமதி இல்லை.
டீக்கடைகளுக்கு அனுமதி
டீக்கடைகள், ரெஸ்டாரெண்டுகள், காய்கறி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் எனப்படும் மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்களில் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குளிர்சாதன வசதிக்கு அனுமதி கிடையாது. டீக்கடைகளிலும் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிடலாம். சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம். வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வாகனங்களில் டிரைவரை தவிர்த்து 3 பயணிகள் பயணிக்கலாம்.
ஆட்டோக்களுக்கு அனுமதி
அதே போல் ஆட்டோக்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவற்றில் டிரைவரை தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்சாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மீன்கடைகள், இறைச்சி கடைகள், முட்டை கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
அனுமதியில்லா விஷயங்கள்
மத வழிபாட்டு தலங்களில் மக்கள் சென்று வழிபட அனுமதி இல்லை. மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணத்துக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி இல்லை. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். சர்வதேச விமான பயணத்துக்கும் அனுமதி இல்லை.
மெட்ரோ ரயில் சேவை மற்றும் புறநகர் ரயில் சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், ஜிம்முகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
சமூக அரசியல் ரீதியிலான பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான பயணம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்துக்கும் அனுமதி இல்லை.
வரும் 31-ம் தேதி வரை பொதுவான ஊரடங்கு அமலில் இருக்கும். அதே நேரம் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் மதுரை கலெக்டருக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி