எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நினைவு எல்லாம் நிறைந்த அம்மாவின் வேதா இல்லத்தை உலகமே கரம் கூப்பி வணங்கும் கோயிலாக மாற்றிட அரசுடமையாக்கி இப்பூவியுள்ளவரை அம்மாவிற்கு அழியாப்புகழை பெற்று தந்த கழகத்தின் காவலர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து அந்த நிலம் மற்றும் நிலத்தை கையகப்படுத்தவதற்காக பூர்வாங்க அறிவிப்பு வெளியிட்டப்பட்டு அதன்பின் இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அம்மாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை 21.5.2020 அன்று அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை தலைவராக முதல்வரும் மற்றும் துணை முதல்வரும் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள் என்று தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசின் சார்பில் நிலத்தை கையகப்படுத்தும் வகையில் 67.88கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு தற்போது அரசுடமையாக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்து வரும் வேளையில் அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியது;
ஓய்வில்லாமல் உழைத்து, உருகும் மெழுகாய் ஒளிர்ந்து, அன்னை தமிழகத்தை விண்ணை முட்டும் வெற்றிகளால் அலங்கரித்து, உலைக்கு அரிசி தந்து பசியைப் போக்கி, பொன்னி நதி உரிமையை மீட்டு, விஞ்ஞான யுகத்திற்கு சவால் விடும் வகையில் தமிழகத்தை அறிவுசார் பூமியாகி, தமிழகத்திற்கு ஆக்கம் தந்து எட்டு கோடி தமிழினத்தை கட்டி காத்திட்ட எங்கள் குலசாமி, தன் உடல் பேணாது, தன்னலம் பாராது, தமிழகத்தின் நலன் ஒன்றையே கண்ணாகக் கருதி, தம்மை மெய் வருத்தி உழைத்திட்ட தங்கத்தாரகை, இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கம் திருப்பி காட்டிய தெய்வத்திருமகள், ஆணாதிக்க மிக்க அரசியலை பெண் இனத்திற்கு தேன் ஆதிக்கமாக்கிய உப்பில்லா உரிமைக்குரல், அமெரிக்கா கிளிண்டன், அர்னால்டு, அன்னைதெரசா தொடங்கி உலகத் தலைவர்களையே விழி விரித்து பார்க்க வைத்த வெற்றியின் பொக்கிஷம், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மாதவம் வாழ்ந்து தமிழினமே, தனக்கு உறவு, தமிழகமேதனக்கு வேலி என்று சங்கத்தமிழ் பூமிக்காக சந்தனமாய் கரைந்த சரித்திர தலைவி தமிழக மக்களுக்கு அம்மா செய்த சாதனைகளையும், தியாகங்களையும், சேவைகளையும், கொடைஉள்ளத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வருங்கால இளைய சமுதாயமும் அறிந்துகொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு அம்மாவின் இல்லத்தை பார்வைக்கு அனுமதிக்கப்படும் வகையில் ஒன்னரை கோடி கழகத் தொண்டர்களின் உயிர் நாதம் , அம்மா குடியிருந்த கோவிலாம், நினைவு எல்லாம் நிறைந்த வேதா இல்லத்தை, உலகமே கரம் கூப்பி வணங்கும் வண்ணம் நினைவு இல்லமாக மாற்றிட இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், வலிமை மிக்க அரசியலை தன் எளிமையால் வணங்க வைத்த எங்கள் புன்னகை போராளி, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் 17.8.2017 அன்று அறிவித்தார்.
அதனைதொடர்ந்து கோடானுகோடி மக்களின் விழிகளை ஈர்த்திட்ட அன்னை ஓர் ஆலயமாய், ஆயிரம், ஆயிரம் வாகைபூக்களை பூக்க வைத்த அதிசயமாம். அம்மா எனும் சொல்லுக்கு அழகு சேர்ந்த காவியம், தாய் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிடும் வகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக 67.88 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அள்ளித் தந்து இதன் மூலம் இப்பூவி உள்ளவரை அம்மாவின் புகழை, மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அம்மாவிற்கு அழியாப் புகழை உருவாக்கித் தந்து உலகத் தமிழர்களின் உள்ளத்து வேட்கைக்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா தலைவர், குடிமராமத்து நாயகன், பால் ஹாரீஸ் பொல்லோ விருது பெற்று ஒட்டுமொத்த இந்தியாவின் வழிகாட்டியாகத் திகழும், இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், இந்த வரலாற்று வைபவம் வடிவம் பெறுவதற்கு, துணை நின்று சாதனை படைத்திட்ட பாண்டியநாட்டு பண்பாளர், ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பி.எஸ். சுக்கும் அம்மா பேரவை சார்பில் கோடான கோடி நன்றி மலர்களை தங்களின் பொற்பாதம் பணிந்து, வணங்கி செலுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது மட்டுமல்லாது என்றைக்கும் நன்றி மறவாத இனம் நம் தமிழினம் என்பதை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியினை முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்பதை, அம்மா பேரவை மகிழ்வோடு, பெருமையோடு சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை கழகத்தின் காவலர்களான, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை பொற்பாதம் பணிந்து, வணங்கி, தங்களின் பாத தடத்தின் வழியில் என்றைக்கும் அம்மா பேரவை ராணுவ சிப்பாயாக பணியாற்றி, கழகத்திற்கு அரணாக இருந்து புதிய வெற்றி வரலாறு சரித்திரம் படைக்க களப்பணி ஆற்றுவோம் என்று சூளுரை ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம், எஸ் எஸ் சரவணன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், வக்கீல் தமிழ்ச்செல்வன் , லட்சுமி , பால்பாண்டி, மகேந்திரபாண்டி, சிங்கராஜ பாண்டியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, பிச்சை ராஜன்,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இன்டெல் திடீர் முடிவு
18 Jul 2025நியூயார்க், அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு வள்ளி குகையில் வழிபாடுக்கு பக்தர்களுக்கு அனுமதி
18 Jul 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை: எலான்
19 Jul 2025நியூயார்க் : அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை ஆனால் வேறு வழியில்லாமல் கட்சித் தொடங்கினேன் என எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்கத்துக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு : மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்
19 Jul 2025புதுடில்லி : ''பண மூட்டை பிரச்னையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவி
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.