எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் இருதய செயலிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல்முறையாக Pediatric அறுவை சிகிச்சை முறையான Biventricular Berlin Heart Implantation அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த MGM Healthcare மருத்துவமனையின் மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது,
உலகில் முன்னேறிய நாடுகளில் ஒன்றான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவன் இருதய செயலிழப்பு பிரச்சினையினால் அவதிப்பட்டு வந்ததால், அச்சிறுவனுக்கு மிகவும் சிக்கலான Pediatric இருதய அறுவை சிகிச்சை முறையான Berlin Heart pump ventricular support சிகிச்சையை அளித்து தமிழ்நாட்டின் பெருமையை உலக சுகாதார வரைபடத்திற்கு கொண்டு சென்ற MGM Healthcare மருத்துவமனைக்கு முதலில் எனது மனமார்ந்த பாட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இருதய அறுவை சிகிச்சை தெற்கு ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய பகுதிகளில் முதன் முறையாக, MGM Healthcare மருத்துவமனையில் பணியாற்றும் இந்திய மருத்துவர்களால் செய்யப்பட்டது என்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
உயிரை பாடுபட்டு காப்பாற்றும் மருத்துவர்களை தெய்வத்திற்கு இணையாக மக்கள் போற்றுகின்றார்கள். உலகமே கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், உலகமே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கின்ற வகையில், இந்த அறுவை சிகிச்சையை அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு செய்து சாதனை படைத்த MGM Healthcare மருத்துவமனையையும், இதற்காக பணியாற்றிய மருத்துவர்களையும் நான் வெகுவாக பாராட்டுகின்றேன்.
தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அனைவராலும் அழைக்கப்படுவதற்கு இந்த நிகழ்வு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். சமுதாயத்தில் அனைத்து கட்ட வளர்ச்சிக்கும் ஆரோக்கியம் மிக முக்கியமானதாகும். சமூகப் பொருளாதார பின்னணி எதுவாக இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல், மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை தொடர்பான திறன்மிகு நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை கிடைத்திட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்பதே அம்மா அரசின் நோக்கமாகும்.
உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. இதன் காரணமாகத்தான், கொரோனா தொற்று நோய் பரவும்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவாக உரிய சிகிச்சை வழங்கி, உயிரிழப்பு ஏற்படுவது பெரும்பாலும் தடுக்கப்பட்டது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, கொரோனா நோய் தாக்கத்திலிருந்து மக்களை மீட்க எது சரியான பாதையோ அதை தேர்ந்தெடுத்து சரியான வழிமுறைகளை எந்தவிதமான அச்சமுமின்றி நேர்மையுடனும், உண்மையுடனும் இந்த அரசு எடுத்து வருகிறது. இந்நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது நோயினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, இந்த நோயினுடைய பாதிப்பு தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
மேலும், உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இந்த நோயினால் இறப்பவர்களின் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வருவதால், இன்றைக்கு வெளி மாநிலத்திலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்கு, அதிக எண்ணிக்கையில் மக்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
இதன் காரணமாக, தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவச் சுற்றுலாத் தலமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு மருத்துவர்கள், MGM Healthcare மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியதைப் போல மருத்துவ சிகிச்சை முறையில் பல புதிய சாதனைகளை படைத்து, தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை உலகிற்கு மீண்டும், மீண்டும் நிரூபிக்க வேண்டுமென்று அன்போடு மருத்துவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
தற்போது உலகளாவிய சாதனையை நிகழ்த்தியிருக்கும் MGM Healthcare மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


