எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை நகருக்கு வருகை தருகிறார்.
இங்கு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறார். இன்று இரவு மதுரையில் தங்கும் அவர், நாளை 7-ம் தேதி நெல்லை சென்று அங்கும் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு நடத்துகிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 1.84 கோடி பேர் இந்த தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று ஆரம்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் தற்போது வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் ஆரம்பத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ், தற்போது கணிசமாக குறைந்து விட்டது.
இதே போல் மதுரையிலும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் கே. ராஜூ ஆகியோரின் அதிரடி நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்த தொற்றின் பாதிப்பு வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சென்று அங்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திண்டுக்கல்லில் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை நகருக்கு வருகிறார். முதலில் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு காலை 9.30 மணியளவில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்.
அதன் பிறகு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அதையடுத்து சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினருடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக முதல்வரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் மருதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்கிறார்கள். திண்டுக்கல்லில் தனது பணிகளை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நண்பகல் 12.30 மணிக்கு மதுரை புறப்படுகிறார்.
மதுரையில் ஆய்வு
பிற்பகல் 2 மணியளவில் கார் மூலம் மதுரைக்கு வந்து சேரும் முதல்வர் எடப்பாடி நேராக கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். பிறகு ரூ. 326.10 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன்பிறகு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ். சரவணன்,பெரிய புள்ளான், மாணிக்கம், நீதிபதி மற்றும் கலெக்டர் வினய், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாய சங்க பிரதிநிதிகளையும், தொழில்துறை நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
கோவிட் கேர் சென்டரில் ஆய்வு
அதை தொடர்ந்து காரில் புறப்பட்டு மதுரை அருகே வடபழஞ்சியில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன, 900 படுக்கைகளுடன் கூடிய கோவிட் கேர் சென்டரை அதாவது கொரோனா சிறப்பு மையத்தை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவில் மதுரையில் தங்குகிறார்.
நெல்லையில் ஆய்வு
நாளை காலையில் நெல்லை புறப்பட்டு செல்லும் முதல்வர் அங்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்துகிறார். நெல்லையில் புகழ் பெற்ற தாமிரபரணி ஆற்றில் ரூ. 18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் முதன்முதலாக நதிநீர் இணைப்பு திட்டம் நெல்லை மாவட்டத்தில்தான் செயல்படுத்தப்படுகிறது. அதாவது தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு ஆகிய நதிகளை இணைத்து புதிய கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியையும் முதல்வர் பார்வையிடுகிறார். நெல்லையிலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
மேற்கண்ட நிகழ்ச்சியிகளில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
உக்ரைன் உடனான போர்: புதின் மீது ட்ரம்ப் அதிருப்தி
04 Jul 2025வாஷிங்டன் : உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனா
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.