எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெல்லை : தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்ட பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
உலகில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழ்கின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் தமிழகத்திலும் பரவியுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு அம்மாவின் அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து, அதன்மூலம் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித தொய்வும் இல்லாமல் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப வேண்டும் என்று விரும்பியவர்களை, அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அரசின் செலவிலேயே ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இரண்டு மாவட்டங்களிலும் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாவட்டங்களிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை நான்காகக் பிரித்து செயலாக்கத்திற்கு எடுத்து, 4-வது திட்டத்திற்கு ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணியும் துவங்க இருக்கின்றன.
தற்போது நில எடுப்புப் பணி முடியும் தருவாயில் இருக்கின்ற சூழ்நிலையில், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்க உள்ளன. சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கும் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள இரண்டு கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அண்மையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை ரூபாய் 150 கோடி செலவில், ஏழு தளங்களுடன் 330 படுக்கை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த மருத்துவக் கல்லூரியில், ஏற்கனவே 150 மாணவர்கள் MBBS பயின்று வந்தார்கள்.
இப்பொழுது கூடுதலாக 100 இடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது 250 மாணவர்கள் MBBS மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் நிலையை அம்மாவின் அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.
அதேபோல, JICA நிதியுதவின் கீழ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூபாய் 10 கோடி செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 20.01 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டுவதற்கும், அதிநவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், மொத்தம் ரூபாய் 51.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற முடியாத சூழலை மாற்றி, அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கருவிகளை நிறுவி வருகிறோம்.
அந்த வகையில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 21 கோடி செலவில் புற்றுநோய் சிசிச்சை அளிக்க அதிநவீன Linear Accelerator கருவி வெகு விரைவில் நிறுவப்படவுள்ளது.
இந்த வகையில் எல்லாம், மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அம்மாவின் அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்..!
29 Dec 2025புதுடெல்லி, ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.



