எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி ஜூலை.06 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகத்தை தமிழக நிதியமைச்சரும், கழக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவில் போடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
போடிநாயக்கனுனூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகத்தை ஜூன் 01-ம் தேதி துவங்கி ஜூன்-05 வரை 5 நாள்கள் நடைபெற்றது. இதில் முதல் நாளான ஜூன் 01-ம் தேதி அனிக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹாசங்கல்பம், ஆச்சார்யவரணம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், தனபுஜை, கணபதி ஹோமம், புர்ைணாஹூதி, தீபாராதனை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரசேஷாக்னஹோமம் போன்ற புஜைகளும்,
இரண்டாம் நாளான ஜூன் 02-ம் தேதியன்று நவக்ரஹஹோமம், சாந்தி ஹோமம், மிருத்ஸங்பிரஹணம், அங்குரார்ப்பணம், ரசஷாந்தனம், மண்டபாராதனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், அக்னிகார்யம், திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாராதணை போன்ற நிகழ்ச்சிகளும்,
மூன்றாம் நாளான ஜூன் 03-ம் தேதியன்று விசேஷசந்தி, விக்னேஸ்வர புஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பிரவேசம், இரண்டாம் காலயாகபுஜைகள், அஷ்டாதசக்ரியாவளி, திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை, விசேஷசந்தி, விக்னேஷ்வர புஜை, மூன்றாம் காலயாகபுஜைகள், பரிவார அஷ்டபந்தனம், தீபாராதணை போன்ற நிகழ்ச்சிகளும்,
நான்காம் நாளான ஜூன் 04-ம் தேதியன்று விசேஷசந்தி, விக்னேஸ்வர புஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பிரவேசம், நான்காம் காலயாகபுஜைகள், விமான கலசம் வைத்தல், திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை, விசேஷசந்தி, விக்னேஷ்வர புஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பிரவேசம், ஜந்தாம் காலயாகபுஜைகள், லட்சுமிபுஜை, யந்த்ர ஸ்தாபனம், மூலவர் அஷ்டாந்தனம், திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை போன்ற நிகழ்ச்சிகளும்,
ஜந்தாம் நாளான ஜூன் 05-ம் தேதியன்று ஜந்தாம் காலயாகபுஜைகள், பிம்பசுத்தி, ரசஷாபந்தனம், ஸ்பர்சாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் காலை 9.15 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் புஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேல் சுமந்து வந்த தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்;செல்வம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கோபுரத்தில் நின்றபடி பச்சை கொடி அசைத்து கும்பாபிஷேகத்தை துவக்கி வைத்தார். அமைச்சர் கொடி அசைத்தவுடன் விமான, ராஜகோபுரத்தில் இருந்த கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதனை தொடர்ந்து சபரிவாரஸ்ரீவள்ளி தெய்வானைக்கும், அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தின் போது வானத்தில் கருடபகவான் தரிசனம் கிடைத்தை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதினார்கள்.
மேலும் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து நடைபெற்ற புஜையில் தீபாராதணை நடைபெற்றது, அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் அரோகரா, அரோகரா என்ற சரணகோஷமிட்டு முருகப்பெருமானை வழிப்பட்டனர்.
இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவரும், போடி நகர்மன்ற தலைவருமான பழனிராஜ், கெளரவத்தலைவர் முத்துவீர சுருளியம்மாள், கோவில் தக்கார் சுதா, திருப்பணிக்குழுவினர்கள் - பாலமுருகன், தியாகராஜன், வடமலை ராஜையபாண்டியன், வேல்ராஜ், கண்ணன் (எ) கிருஷ்ணராஜ், பாலசுப்பிரமணியன், சம்பத், ராஜ்மோகன், சுந்தர்ராஜ், கதிரேசன், கருப்பையா, பெரியமனோகரன், ராமசுப்பிரமணியம் (எ) ரமேஷ், ராஜகோபால், சுப்பிரமணி, மெய்யப்பன், பெருமாள், சந்திரசேகர், ராஜா, மோகன், மாரியப்பன், ராம், சுருளிவேல், ராமநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
போடிநாயக்கனுனூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு போடி ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கான அன்னதானத்தினை பெரியகுளம் கைலாசப்பட்டி அருள்மிகு கைலாசநாதர்சுவாமி திருக்கோவில் ஆலோசகர் ஓ.பி.ரவீந்திரநாத், போடிநாயக்கனுனூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு பரமசிவன் திருக்கோவில் ஆலோசகர் ஜெயபிரதீப் ஆகியோர் வழங்கினார்கள்.
யாகசாலை புஜைகளை பழனி திருக்கோவில் வேதசிவாகம பாடசாலை முதல்வரும், ஆகம வல்லுனர் குழு தலைவருமான பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.


