எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : தனக்கு சிலை செய்வதற்கு ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்திருக்கிறார் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இது அவரது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலு என திரையுலகத்தினராலும், பாடும் நிலா என அவரது ரசிகர்களாலும் போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 25-ம் தேதி காலமானார்.
மறுநாள் அவரது தாமரைபாக்கம் பண்ணை இல்லத்தில் அவரது உடல் இறுதி சடங்கிற்கு பிறகு 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று அவர் மறைந்த மூன்றாவது நாளாகும். அதற்கான சடங்குகளும் நடைபெற்றது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் எஸ்.பி.பி. சரண், தனது தந்தைக்கு நினைவாலயம் கட்ட விரும்புவதாக தெரிவித்தார். விரைவில் அது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் தன் தந்தைக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறார்கள். எனவே அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.
இந்த நிலையில் தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி ஒருவரிடம் ஆர்டர் கொடுத்திருக்கிறார் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கொரோனா காலமாக இருந்ததால் தான் நேரில் செல்ல முடியாத காரணத்தால் தனது புகைப்படத்தை அந்த சிற்பிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் எஸ்.பி.பி.
அந்த சிலை அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் அதற்குள்ளாகவே எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை இயற்கை அரவணைத்து கொண்டு விட்டது. தனக்கு சிலை அமைக்க எஸ்.பி.பி. முன்பே ஆர்டர் கொடுத்தது பற்றி கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர். தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து விட்டாரோ என்று ரசிகர்கள் தற்போது பரவலாக பேச தொடங்கி விட்டார்கள்.
இந்நிலையில் மறைந்த பாடகருக்கு நினைவு மண்டபம் அமைப்பது பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
மேலும் எஸ்.பி.பி.-க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தாதாசாஹிப் பால்கே விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சில நடிகர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


