எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாத வாக்கில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலை சந்திக்க கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே தயாராகி வருகின்றன. ஏற்கனவே இரு முறை தொடர்ச்சியாக ஆட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க.வும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. பல்வேறு மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்பு முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று திங்கட் கிழமை சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 9.45 மணிக்கு கூடவுள்ளது.
இக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட சுமார் 250 பேர் பங்கேற்கவிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியே முறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு வருகை தரும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள செயற்குழு உறுப்பினர்களும் அங்கேயே பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்களின் பரிசோதனை முடிவுகள் விவரம் தலைமைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலருக்கு ‘பாசிட்டிவ்’ என்று முடிவுகள் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. கொரோனா ‘பாசிட்டிவ்’ உள்ளவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செயற்குழுவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களை ஓ.பன்னீர்செல்வம் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், இதே போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசி மூலம் முக்கியமானவர்களுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட கூட்டம் கூட்டப்பட்டது.
அப்போது தமிழக தேர்தல் தொடர்பாகவும், முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டத்திலும் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவிருக்கிறார்கள். அதை தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு நடக்கும் தேதியும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு பொதுக்குழுவில்தான் ஒப்புதல் வழங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
இன்று நடக்கும் செயற்குழுவில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தலில் கூட்டணி அமைப்பது உட்பட பல முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்படவிருக்கிறது.
எனவே உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்து சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனனை முதல்வர் எடப்பாடி சில தினங்களுக்கு முன் சந்தித்தார். அவரை தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் மதுசூதனனை சந்தித்து பேசினார்.
இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சந்திப்புகளில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழலில்தான் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
அஜித்குமார் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
03 Jul 2025சென்னை, போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும், ''என விடுதலை சிறுத்தைகள் கட்சியி
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 82 பேர் பலி
03 Jul 2025ஜெருசலேம், காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
03 Jul 2025புதுடெல்லி, டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசினார்.
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
அமெரிக்காவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: வியன்னாவில் நிறுத்தி வைப்பு
03 Jul 2025புதுடெல்லி, டெல்லியில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் புறப்படு சென்றது.
-
ஆபாச நடனமாடிய விவகாரம்: அர்ச்சகர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
03 Jul 2025ஶ்ரீவில்லிபுத்தூரில், ஆபாசமாக நடனமாடிய ஆர்ச்சகர்களின் முன்ஜாமீன் மனுவை ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
விவசாயிகள் தற்கொலை: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
03 Jul 2025புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, “விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது” என
-
மிக சுவையான உணவு கிடைக்கும் 100 இடங்களில் 6 இந்திய நகரங்கள்
03 Jul 2025புதுடில்லி: சுவை மிகுந்த உணவு கிடைக்கும் உலகின் டாப் 100 நகரங்களில், 6 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.