எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் இருமொழி கொள்கையே அ.தி.மு.க.வின் கொள்கை என்றும், ஏழை மாணவர்களுக்கு எதிராகவும் கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று காலை (28.9.2020 - திங்கட் கிழமை), சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கூட்டத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் இந்த கூட்டம் நடைபெற்றது.
கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-
பொது வாழ்வுப் பணிகளுக்கு இலக்கணமாக, கொரோனா நோய்த் தொற்று காலத்திலும் கண்துஞ்சாது கடமையாற்றி, மக்களின் துயர் துடைக்க அயராது அரும்பணி ஆற்றி வரும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வது,
அரசு மேற்கொண்டிருக்கும் சிறப்பான பணிகளின் விளைவாக கொரோனா நோய்த் தொற்றிலிருந்தும், பொருளாதார சரிவிலிருந்தும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை ஏற்று, மத்திய அரசு கொரோனா நிவாரணத்திற்கும், தடுப்பிற்கும் போதுமான நிதி ஆதாரத்தை தமிழ் நாட்டிற்கு வழங்க வலியுறுத்துவது,
தமிழ் நாடு அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது, தாய்மொழி - தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இருமொழிக் கொள்கையே என்றென்றைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக் கொள்கை.
எந்த மொழிக்கும் கழகம் எதிரானதல்ல; எந்த மொழியும் எம்மீது திணிக்கப்படுவதை எம்மால் ஏற்க இயலாது - என்ற கருத்தில் கழகம் உறுதியாய் இருக்கும். `நீட்’’ என்ற மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்க்கிறது.
மாநிலங்களின் கல்வி உரிமையில் `நீட்’ தேர்வு மூலம் மத்திய அரசு தலையிடுவதாலும், கிராமப்புற, ஏழை, எளிய, முதல் தலைமுறை மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாலும், `நீட்’ தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
`நீட்’’ தேர்வு முறை அமல்படுத்தப்பட காரணமாக இருந்த மத்திய கூட்டணி அரசில் பங்குபெற்றிருந்த தி.மு.க., இப்பொழுது உண்மைகளை மறைத்து விட்டு ``நீட்’’ தேர்வுகளைக் காட்டி அரசியல் சுயலாபங்களுக்காக கபட நாடகம் ஆடுவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் முதற்கட்டமாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், அவற்றில் புதிதாக 1400 புதிய மருத்துவ பட்டப் படிப்பு இடங்களை உருவாக்கியும், இப்பொழுது 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்தும், அடுத்துவரும் ஆண்டுகளில் புதிதாக 1650 மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் உருவாகவும் வகை செய்திருக்கும் அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது,
மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்தமைக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது, காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து, தமிழ் நாட்டின் நெற்களஞ்சியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய தமிழ் நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும்,
திட்டமிட்டவாறு ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து, காவேரியால் பாசனம் பெறும் அனைத்து விவசாயிகளும் குறுவை சாகுபடி மேற்கொள்ள வழிவகுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்தும்,
விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம், புதிய கலை அறிவியல் கல்லூரிகள், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைத் தொடங்கி உள்ளமைக்கு, அ.தி.மு.க. அரசுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்தும்,
ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவையும், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தையும், சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைத்து, ஒட்டுமொத்தமாக 1,022 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளை தொடங்கி வைத்தமைக்கும், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை துவக்க நடவடிக்கை எடுத்தமைக்கும், முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தும்,
இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில், தென் மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவது, கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும்,
இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தக் கோரிக்கை விடுப்பது, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை என மொத்தம் 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியமைக்கு, தமிழ் நாடு அரசுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்தும், காவேரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்தும், மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்த உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் தமிழ் நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்தும்,
தமிழ் நாட்டின் ஒப்பற்ற முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது நினைவிடங்களை அழகுற அமைத்தமைக்கும், அம்மா வாழ்ந்த இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றியமைக்கும் நன்றி தெரிவித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தனையோடு, ஒற்றுமையாய் பணியாற்றி, தமிழ் நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் பொற்கால ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம், உழைப்போம் என்று சூளுரை ஏற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்
20 Jul 2025சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.