எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 7வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி ரசிகர்களின் ஆரவாரம் இல்லலாமல் இன்று கோவாவில் தொடங்குகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில் நடத்தப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பின் முதன் முறையாக 7வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இந்தியாவிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வழக்கமாக சென்னை, கொல்கத்தா, மும்பை, கொச்சி உள்பட 10 நகரங்களில் நடைபெறும். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவா மாநிலத்தில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள ஜவஹர்லால் நேரு, ஜி.எம்.சி அத்லெட்டிக், திலக் ஆகிய மூன்று ஸ்டேடியங்களில் இன்று முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஏற்கனவே 10 அணிகள் இடம் பெற்றன. தற்போது புதிதாக ஈஸ்ட் பெங்கால் என்ற அணி இணைந்துள்ளது. அதிகமான கால்பந்து ரசிகர்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இருந்து ஐ.எஸ்.எல்.-ல் அடியெடுத்து வைக்கும் 2-வது அணி ஈஸ்ட் பெங்கால் ஆகும்.
ஏற்கனவே பங்கேற்று வரும் அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணியுடன் பழமைவாய்ந்த மோகன் பகான் கிளப் இணைந்து இந்த முறை ஒருங்கிணைந்த அணியாக களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து இந்த சீசனில் அணிகள் எண்ணக்கை 11 ஆக அதிகரித்ததை அடுத்து, போட்டி எண்ணிக்கையும் 95லிருந்து 115 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில் 3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூர், கோவா, மும்பை, ஜாம்ஷெட்பூர், ஒடிசா, வடகிழக்கு யுனைடெட், ஐதராபாத், கேரளா மற்றும் புதிதாக பங்கேற்றுள்ள ஈஸ்ட் பெங்கால் ஆகிய 11 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. உள்ளூர் அணியான எப்.சி. கோவா, முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யுடன் 22–ந் தேதி மோதுகிறது. தற்போது ஜனவரி 11–-ந்தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னையின் எப்.சி.
முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணியுடன் 24–ந் தேதி மோதுகிறது. இந்த போட்டி தொடருக்காக சென்னையின் எப்.சி. அணி கடந்த மாதமே கோவா சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
ஐ.எஸ்.எல் சீசனுக்கான சென்னையின் எப்.சி அணியில், போஸ்னியாவைச் சேர்ந்த எனெஸ் சிபோவிச் இணைந்திருக்கிறார். 6’6″ உயரம் கொண்ட மத்திய கள ஆட்டவீரரான சிபோவிச், ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் சென்னையின் எப்.சி அணியில் இணைந்திருக்கிறார். இதற்கு முன் கத்தாரின் முன்னணி கிளப்பான உம் சலால் எஸ்.சி அணியில் விளையாடி வந்தார்.
இந்த புதிய சீசனில், ரீகன் சிங், சுவாந்தே பனாய் ஆகியோருக்குப் பிறகு சென்னையின் எப்.சி-யில் இணையும் மூன்றாவது வெளிநாட்டு வீரர் ஆவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அஷ்டமி சப்பரம், சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
- மதுரை செல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
-
வார ராசிபலன்
10 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
10 Jan 2026


