எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன் : கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனிடையே அஸ்ட்ராஜெனெகா என்கிற மருந்து நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. மனிதர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இந்த தடுப்பூசி சராசரியாக 70 சதவீத தடுப்பாற்றலை கொண்டுள்ளது அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி கிறிஸ்துமஸ்க்கு முன்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினரான நாதிம் ஜஹாவியை புதிய சுகாதாரத்துறை மந்திரியாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார். இடைக்கால ஏற்பாட்டின் கீழ் நாதிம் ஜஹாவி தற்போது பணிபுரியும் சுகாதாரத்துறை மற்றும் வணிகத்துறை இடையே கூட்டு மந்திரியாக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது முதன்மை கவனம் தடுப்பூசியை வழங்குவதில் இருக்கும் என்றும் அவருடைய வணிக இலாகாவின் பெரும்பாலான பகுதிகள் ஒதுக்கி வைக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இவர் அடுத்த ஆண்டு கோடை காலம் வரை கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மேற் பார்வையிடுவார் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


