எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை மற்றும் பரிசோதனை விறுவிறுப்பாக நடந்தது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, சீனா போன்று இந்தியாவிலும் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் 4 தடுப்பூசி மருந்துகள் ஆய்வில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிகபட்ச குளிர்பதன சேமிப்பு கிடங்குகளில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய சேமிப்பு கிடங்குகள் நாடுமுழுவதும் எத்தனை இடங்களில் உருவாக்க முடியும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து தடுப்பூசி மருந்துகளை எப்படி வினியோகம் செய்வது என்பது பற்றியும் முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அதன்பிறகு பதிவு செய்து கொள்ளும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்படும்.
முன்கள பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகளில் யார் யாருக்கு தடுப்பூசி தேவை என்ற பட்டியல் மாநில வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களில் இருந்தும் தேர்தல் சமயத்தில் வாக்கு சாவடிகளுக்கு வாக்காளர்களை வரவழைப்பதுபோல திட்டமிட்டு ஆங்காங்கே மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் திட்டத்தில் எத்தகைய குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதற்காக 2 நாட்கள் ஒத்திகையை செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆந்திரா, பஞ்சாப், குஜராத், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் நேற்று (திங்கட்கிழமை) தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை தொடங்கியது. இந்த 4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மையங்கள் இதற்காக உருவாக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் தலா 25 பேர் வீதம் சுமார் 100 பேருக்கு தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அந்தந்த மையங்களில் காலையிலேயே வரவழைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் தயார் நிலையில் அமர்த்தப்பட்டனர். தடுப்பூசி சேமித்து வைக்கப்படும் மையத்தில் இருந்து ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு எவ்வளவு மணி நேரத்தில் தடுப்பூசி மருந்து வந்து சேருகிறது என்ற நேரம் கணக்கிடப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் மருந்தின் குளிர்பதன தன்மை ஆய்வு செய்யப்பட்டது. ஒத்திகை நடைபெறும் இடத்துக்கு வந்ததும் மீண்டும் தடுப்பூசி மருந்து பற்றிய உறுதி தன்மை சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டிருந்த பயனாளிகளுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.
அதிகாரப்பூர்வ தடுப்பூசி மருந்து இன்னும் அமலுக்கு வராததால் மாதிரி தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அந்த மையத்தில் சுமார் 30 நிமிடம் உட்கார வைக்கப்பட்டனர். 30 நிமிடங்களில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பயனாளிகள் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 4 மாநிலங்களிலும் இத்தகைய அடிப்படையில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. அசாம் மாநிலத்தில் சோனித்பூர், நல்பாரி மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடந்தது.
விஜயவாடா அரசு மருத்துவமனை, உப்பலூர் ஆரம்ப சுகாதார நிலை யம், பூர்ணா ஹார்ட் இன்ஸ்டிடியூட், பெனமலூர் அரசு மருத்துவமனை, பிரகாஷ் நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் இது நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் 25 பேருக்கு டம்மி கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதற்காக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். தடுப்பூசி ஒத்திகை மையங்கள் அனைத்திலும் 4 அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தன.
தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு ஆரம்பகட்ட பரிசோதனை, பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்தும் இடம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? என்பதை அறிய தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஒவ்வொரு அறையிலும் மருத்துவ அதிகாரிகள், டாக்டர் உள்பட 5 பேர் கண்காணித்தனர். இந்த தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
அரியலூரில் இன்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை நிறைவு நாளில் பிரமதர் நரேந்திரமோடி பங்கேற்பு
26 Jul 2025திருச்சி : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்
-
'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்பி இருக்கும்: இந்திய ராணுவ தளபதி தகவல்
26 Jul 2025ஸ்ரீநகர், ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்பி இருக்கும் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை: முதல்வர் ஸ்டாலின்
26 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; தி.மு.க.
-
சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தபடுகின்றன: சுப்ரீம்கோர்ட் அதிருப்தி
26 Jul 2025புதுடில்லி, ''சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
-
25 ஓ.டி.டி. தளங்களுக்கு தடை
26 Jul 2025புதுடெல்லி, 25 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
-
தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட ரூ. 4,900 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
26 Jul 2025தூத்துக்குடி : 2 நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று தூத்துக்குடியில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய
-
கொரில்லா தாக்குதல்: பலூசிஸ்தானில் 23 வீரர்கள் பலி
26 Jul 2025பலூசிஸ்தான் : பலூசிஸதானில் கொரில்லா தாக்கியதில் அதிகாரி உள்பட 23 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒரே போட்டியில் 10 சாதனைகளை முறியடித்த இங்கி., வீரர் ஜோ ரூட்
26 Jul 2025மான்செஸ்டர் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 10 சாதனைகளை முறியடித்துள்ளார்.
-
மத வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடு ஏதும் இல்லை: தமிழக அரசு
26 Jul 2025சென்னை, பொது வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
நினைவு நாணயம் வெளியிடுவது எங்களின் பாக்கியம்: பிரதமர் மோடி
26 Jul 2025சென்னை : ''முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி எல்.கே.சுதீஷ் மனு
26 Jul 2025சென்னை : தமிழக டி.ஜி.பி.யிடம் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி எல்.கே..சுதீஷ் மனு அளித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் கட்டிடக்கலை மாட்சியை புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள்: அரசு பெருமிதம்
26 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டிடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்
-
பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
26 Jul 2025சென்னை, தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
கிட்னி திருட்டு விவகாரத்தில் கடும் நடவடிக்கை: அமைச்சர்
26 Jul 2025சென்னை : கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம்.
-
3-வது நாளாக சரிந்த தங்கம் விலை
26 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் (ஜூலை 26) குறைந்து விற்பனையானது.
-
உத்தரபிரதேசத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி
26 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
26-ம் ஆண்டு கார்கில் வெற்றி தினம்: உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
26 Jul 2025புதுடெல்லி, கார்கில் வெற்றி தினத்தின் 26-வது ஆண்டு நினைவு நாளில், போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
-
ஈரானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 8 பேர் பலி
26 Jul 2025டெஹ்ரான் : ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.
-
விழாக்கோலம் பூண்ட தூத்துக்குடி: பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
26 Jul 2025தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் : 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
26 Jul 2025புதுடெல்லி : டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
-
மாலத்தீவுக்கு இந்தியா ஆதரவு: அதிபர் முகமது முய்சு நன்றி
26 Jul 2025மாலி : மாலத்தீவுக்கு இந்தியா அரசு அளித்து வரும் ஆதரவுக்கும் உறுதியான நப்புக்கும் நன்றி என முகமது முய்சு கூறினார்.
-
கடந்த 6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்
26 Jul 2025மும்பை : நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
ஹிந்து கோவில் பிரச்னை: தாய்லாந்துடனான போரை நிறுத்த கம்போடியாவுக்கு திடீர் அழைப்பு
26 Jul 2025தாய்லாந்த் : தாய்லாந்து நாடுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கடலூர்: ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் : நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர்
26 Jul 2025சென்னை : கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
இந்தியா - பாக். இடையே 3 போட்டிகள்
26 Jul 2025ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் ஆரம்பமாகும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குரூப்பில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர்