எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் குளிருக்கு மத்தியிலும் நடத்தி வரும் இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், போராட்டத்துக்கு தீர்வு இன்னும் ஏற்படவில்லை. எனவே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
இதற்கிடையே வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த உத்தரவு வரும் வரை மேற்படி வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உள்ளது.
மேலும் இந்த சட்டங்கள் தொடர்பாக சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, இந்த குழு முன் விவசாயிகள் தங்கள் கவலைகளை தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்த குழுவில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மன், ஷேத்காரி கங்கதனா தலைவர் அனில் கன்வாட், வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாதி, பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
எனினும் இந்த குழுவில் இருந்து பூபிந்தர் சிங் மன் சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக புதிய உறுப்பினர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அதேநேரம் இந்த சிறப்பு குழுவை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள சிறப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த தகவலை அனில் கன்வாட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாங்கள் (சிறப்பு குழு) 19-ந் தேதி டெல்லி பூசா வளாகத்தில் கூடுகிறோம். இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இந்த குழுவின் ஒரு உறுப்பினர் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய உறுப்பினரை சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கவில்லை என்றால் மீதமுள்ள உறுப்பினர்கள் கூடி பேசுவோம். எங்களுக்கான விதிமுறைகளை பெற்று இருக்கிறோம். அதன் அடிப்படையில் 21-ம் தேதி முதல் எங்கள் பணிகளை தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு குழு அமைத்த பின்னரும், விவசாயிகளுடன் மத்திய அரசு பேசுவது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த பிரச்சினைக்கு எங்கள் மூலமோ அல்லது அரசின் பேச்சுவார்த்தை மூலமோ தீர்வு ஏற்பட்டு, போராட்டம் முடிவு பெற்றால் மகிழ்ச்சிதான். அரசு தனது பேச்சுவார்த்தையை தொடரட்டும். எங்களுக்கு ஒரு கடமை வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்’ என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


