முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா தனது பகுதி என நியாயப்படுத்துகிறது

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

சீனா, அருணாசலபிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்து அத்துமீறல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் மேல சுபன்ஸ்ரீ மாவட்டத்தை சீன பகுதியாக சித்தரித்து உரிமை கொண்டாடி உள்ளது. சீனாவின் இந்த போக்கை, அனைத்து அருணாசல பிரதேச மாணவர்கள் யூனியன் அமைப்பு (ஏ.ஏ.பி.எஸ்.யூ.), கடும் கண்டனம் தெரிவித்து எச்சரித்துள்ளது. 

சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது. இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இமேஜிங் நிறுவனமான பிளானட் லேப்ஸ் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான எந்த செயல்பாடும் தென்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாத செயற்கைகோள் படத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எல்லை அருகில் இந்தியா அதிகமான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. ராணுவத்தை குவித்து வருகிறது என சீனா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் தற்போது சீனா கட்டியுள்ள கிராமம் அருகில் இந்தியா எந்தவொரு கட்டமைப்பையும் உருவாக்கவில்லை. 

இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது என்ற தகவல்களுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சகம் (எம்.இ.ஏ) இந்தியா அதன் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என கூறியது. 

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த சமீபத்திய அறிக்கைகளை நாங்கள் பார்க்கிறோம் . கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற உள்கட்டமைப்பு கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது . 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நமது அரசாங்கமும் சாலைகள், பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிப்பது உள்ளிட்ட எல்லை உள்கட்டமைப்பை முடுக்கிவிட்டுள்ளது, இது எல்லையில் உள்ள உள்ளூர் மக்களுக்கு மிகவும் தேவையான இணைப்பை வழங்கியுள்ளது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து