எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.7 - குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் வேட்பாளரான ஜஸ்வந்த் சிங்கை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்று தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்து ஆதரவு கோர நேற்று சென்னை வந்தார்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவதால் நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீண்டும் போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், அன்சாரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவை பெறுவதற்காக ஜஸ்வந்த் சிங் நேற்று சென்னை வந்தார். முன்னதாக கோடநாட்டிலிருந்து,விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா சென்னை வந்தார். அவரை அமைச்சர்கள், எம்.பி.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். சென்னை வந்த ஜஸ்வந்த் சிங், பிற்பகலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவைக் கோரினார். இந்த சந்திப்பு பிற்பகல் 3.30 முதல் 3.45 வரை சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, நேரில் சந்திப்பதற்கும் கேட்டுக் கொண்டார். ஜஸ்வந்த் சிங்கை 1984 ஆம் ஆண்டு முதலே, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு தெரியும். இருவரும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றியுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். ஜஸ்வந்த் சிங், நேற்று (6.8.2012) அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, ஜஸ்வந்த் சிங்குக்கு, அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்துக் கொண்டார். இதற்கு ஜஸ்வந்த் சிங் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது அ.தி.மு.க. பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும், அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டாக்டர் மு. தம்பிதுரை, பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய பின்னர் முதல்வரின் இல்லத்திலிருந்து வெளியே வந்த ஜஸ்வந்த்சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நிர்வாகத் திறமையற்றது என்பது நிரூபணமாகிவிட்டது. இதனால் இந்தியா கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியால் தீர்க்க முடியவில்லை. ஆகையால் அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் என்னை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனை வரவேற்கும் விதமாக ஜஸ்வந்த் சிங்குக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜஸ்வந்த்சிங்குடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-
நண்பர் ஜஸ்வந்த்சிங் 28 ஆண்டு கால நண்பர். தனிப்பட்ட முறையில் அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால் அதனை வரவேற்கும் விதமாக துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த்சிங்கை அ.தி.மு.க. ஆதரிக்கும். ஜஸ்வந்த் சிங் மக்களவையில் சிறப்பாக பணியாற்றினார். அதனால் அவரை ஆதரிக்க அ.தி.மு.க. முன்வந்தது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
(ஆச்ஞ் சடீசூஙூ)
அ.தி.மு.க. தலைமை நிலையயம் அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவின், முக்கிய அறிவிப்பு:-
இன்று (7.8.2012) நடைபெற உள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங்-க்கு, அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.