எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், பிப்.21 - வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணியை மக்கள் விரட்டியடிக்க வேண்டுமென திண்டுக்கல்லில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டணிக்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரா.விசுவநாதன் ஆவேசமாகப் பேசினார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உத்தவரின் பேரில் தமிழகம் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அ.தி.மு.க. வினர் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசுகையில், உலகத்திலேயே மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழல் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரான ராசா பதவி விலக வேண்டுமென அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் எதிரொலியாக அவர் பதவி விலக நேரிட்டது. அதனையடுத்து அவரைக் கைது செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பலனாக அவர் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழலால் பலனடைந்தவர்களையும், பயன் பெற்றவர்களையும் கைது செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இது நிச்சயமாக வெற்றி பெறும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டும் குற்றவாளியல்ல. அவரோடு மட்டும் நடவடிக்கை நின்று விடக்கூடாது. ஏனெனில் கருணாநிதி குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர்களை ஏன் கைது செய்யவில்லை.
டாடா, ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய கம்பெனிகளும் இந்த ஊழலில் பங்கு பெற்றுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு உள்ளதால் இந்த ஊழலில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வருவதைப் பார்த்து அக்கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் தங்களது பங்கிற்கு மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் தமிழகத்தில் தி.மு.க. ஆளப்போவது இதுவே கடைசி முறை என்பது அவர்களுக்கே தெரிந்த விஷயமாகும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணியை விரட்டியடித்து விட்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சியமைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் ராமுத்தேவர், பேரவை செயலாளர் பாரதிமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி.செல்லச்சாமி, மாவட்ட பொருளாளர் குமாரசாமி, தொகுதி செயலாளர் மருதராஜ், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், இளைஞரணி செயலாளர் சரவணன், பாசறை செயலாளர் ஆனந்தகுமார், கவுன்சிலர்கள் பழக்கடை நாகராஜ், மோகன், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மா.கம்யூ மாவட்டச் செயலாளர் பாண்டி, நகரச் செயலாளர் கல்யாணசுந்தரம், ம.தி.மு.க. மாநில இளைஞரணி அமைப்பாளர் அழகுசுந்தரம், நகரச் செயலாளர் பரசுராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் சந்தானம், மாவட்டச் செயலாளர் பேட்ரிக் சகாயநாத் உட்பட அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-01-2026
06 Jan 2026 -
தமிழகத்தில் வருகிற 9, 10-ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் வருகிற 9. 10- மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறது தமிழ்நாடு அரசு: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
06 Jan 2026சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்..!
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெரம்பலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை தீர்ப்பு
06 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்றும் அரசின் மேல் முறையீட்டு மனுவை
-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
06 Jan 2026சென்னை, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
06 Jan 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 12-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) சம்மன் அ
-
தேசிய சராசரியை தாண்டி தமிழ்நாடு புதிய சாதனை: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையில் தகவல்
06 Jan 2026சென்னை, சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் வினியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியை தமிழ்நாடு விஞ்சியுள்ளதாக மாநில திட்டக் கு
-
மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: வருகிற 25-ம் தேதிக்குள் மக்கள் கருத்துகளை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
06 Jan 2026சென்னை, மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்களுக்கு 25-ம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
06 Jan 2026தஞ்சாவூர், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு இன்று உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி பெயர்கள் நீக்கம்
06 Jan 2026லக்னோ, தமிழகத்தை போன்றே உத்தரபிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் நடைமுறை வரும் 12-ம் தேதி முதல் அமல்
06 Jan 2026சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டம்: வரும் 8-ம் சென்னையில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில்மகேஷ், இந்த திட்டத்தை வருகிற 9-ம் தேதி முதல
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
அமெரிக்காவை நிச்சயம் பழிதீர்ப்போம்: நிகோலஸ் மதுரோவின் மகன் உறுதி
06 Jan 2026நியூயார்க், அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம் என்று அமெரிக்க படையால் கைது செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
-
லல்லு பிரசாத் யாதவுக்கு எதிரான விசாரணைக்கு தடை இல்லை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
06 Jan 2026புதுடெல்லி, லல்லு பிரசாத் யாதவுக்கு எதிரான விசாரணைக்கு தடை இல்லை என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
ஜன நாயகன் திரைப்படம் வெளியாகுமா? விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்
06 Jan 2026சென்னை, நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ
-
ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
06 Jan 2026புதுடெல்லி, ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
தமிழக கவர்னருடன் இ.பி.எஸ் சந்திப்பு
06 Jan 2026சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார்.


