எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத் : வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட இரு கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நேற்று நடைபெறவிருந்த ஐ.பி.எல் தொடரின் 30-வது லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அகமதாபாத்தில் பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் ஆட்டம் நேற்றிரவு நடைபெற இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் அமைப்பு அறிவித்தது.
இரு கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பதால் நேற்று நடைபெறவிருந்த பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையில் மற்ற வீரர்களுக்கு கொரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கொல்கத்தா அணி வீரர்களிடமிருந்து இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக்குழு அவர்களுடைய உடல்நலத்தைக் கவனித்து வருகிறது. இதனால் கொல்கத்தா அணி வீரர்களுக்குத் தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு யாராவது மேலும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படும். இரு வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யவுள்ளோம். வீரர்களின் பாதுகாப்பில் பி.சி.சி.ஐயும், கொல்கத்தா அணியும் அக்கறை கொண்டுள்ளோம் என ஐ.பி.எல் சார்பில் நேற்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


