எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்புரம்,ஏப்.- 6 - தீவிரவாதத்தையும் இதர கிரிமினல் குற்றங்களையும் தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தப்படும் என்று கேரள மாநிலத்தில் பா.ஜ. சார்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரள மாநில சட்டசபை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா சார்பாக நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையை கட்சியின் மத்திய பிரிவு செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி வெளியிட்டு கூறியதாவது:-
தீவிரவாதத்தையும் இதர கிரிமினல் குற்றங்கள் நடப்பதையும் தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும். குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசானது நாட்டிற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்கு தொழில் பெருகி வருகிறது. அதேமாதிரி கேரள மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். முன்னேறிய வகுப்பை சேர்ந்த ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்படும். மலைசாதியினருக்கு நில ஒதுக்கீடு செய்ய தனியாக ஒரு மசோதா கொண்டுவரப்படும். கேரளாவில் இதர மாநிலத்தவர்களின் நலனுக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். உலகப்புகழ் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரயில்பாதை போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


