எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.6 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாநேற்று (5.9.2012) தலைமைச் செயலகத்தில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் புதிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மாறிவரும் காலத்திற்கேற்ப தேவையான திறன்களைப் பெறும் வகையில் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியினை அனைத்து மாணவச் செல்வங்களும் பெறவேண்டும் என்பதே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயர்ந்த நோக்கமாகும். தொழில்நுட்பக் கல்வி, தமிழக மாணவச் செல்வங்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக உள்ளது. கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தர மாணவ, மாணவிகள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே தொழிற்கல்வி பயில பொறியியல் கல்லூரிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் புதிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.
இக்கல்லூரியில், முதலாம் ஆண்டு அமைப்பியல் பிரிவு, இயந்திரவியல் பிரிவு, மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பிரிவு மற்றும் கணினி அறிவியல் பிரிவு ஆகிய பிரிவுகளில் தலா 60 மாணவ, மாணவிகள் என மொத்தம் 300 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். இப்புதிய பொறியியல் கல்லூரிக்குத் தேவையான கட்டடங்கள், உபகரணங்கள், ஆசிரியர் நியமனம், மாணவ, மாணவியர் விடுதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 93 கோடியே 64 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம், கன்னியாகுமரி மாவட்டம் கோணம் ஆகிய இடங்களில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள் மற்றும் கோயம்புத்தூர், அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றிற்கு 60 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், பெரம்பலூர் மாவட்டம் கீழக்கனவாய், மதுரை மாவட்டம் அம்பலக்காரன்பட்டி, தேனி மாவட்டம் கோட்டூர், திருவாரூர் மாவட்டம் கொற்கை, கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 29 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், சென்னை மாவட்டத்தில் மாநிலக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி; கடலூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பர்கூர் அரசு கலைக் கல்லூரி (மகளிர்), அரியலூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி; நாமக்கல் மாவட்டம் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக் கல்லூரி (மகளிர்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி (மகளிர்), சிவகங்கை மாவட்டம் அரசு கலைக் கல்லூரி (மகளிர்), கோயம்புத்தூர் மாவட்டம் அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (மகளிர்), தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரி (மகளிர்) மற்றும் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 12 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், நூலகங்கள், மாணவியர் விடுதி உள்ளிட்ட புதிய கட்டடங்கள்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி மாவட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் 8 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் என மொத்தம் 110 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நிதியமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
26 Oct 2025பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியயை ஆகியோரை போலீஸார் சனிக்கிழ
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி வாக்குறுதி
26 Oct 2025பாட்னா : பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்


