எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.6 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாநேற்று (5.9.2012) தலைமைச் செயலகத்தில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் புதிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மாறிவரும் காலத்திற்கேற்ப தேவையான திறன்களைப் பெறும் வகையில் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியினை அனைத்து மாணவச் செல்வங்களும் பெறவேண்டும் என்பதே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயர்ந்த நோக்கமாகும். தொழில்நுட்பக் கல்வி, தமிழக மாணவச் செல்வங்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக உள்ளது. கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தர மாணவ, மாணவிகள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே தொழிற்கல்வி பயில பொறியியல் கல்லூரிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் புதிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.
இக்கல்லூரியில், முதலாம் ஆண்டு அமைப்பியல் பிரிவு, இயந்திரவியல் பிரிவு, மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பிரிவு மற்றும் கணினி அறிவியல் பிரிவு ஆகிய பிரிவுகளில் தலா 60 மாணவ, மாணவிகள் என மொத்தம் 300 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். இப்புதிய பொறியியல் கல்லூரிக்குத் தேவையான கட்டடங்கள், உபகரணங்கள், ஆசிரியர் நியமனம், மாணவ, மாணவியர் விடுதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 93 கோடியே 64 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம், கன்னியாகுமரி மாவட்டம் கோணம் ஆகிய இடங்களில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள் மற்றும் கோயம்புத்தூர், அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றிற்கு 60 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், பெரம்பலூர் மாவட்டம் கீழக்கனவாய், மதுரை மாவட்டம் அம்பலக்காரன்பட்டி, தேனி மாவட்டம் கோட்டூர், திருவாரூர் மாவட்டம் கொற்கை, கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 29 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், சென்னை மாவட்டத்தில் மாநிலக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி; கடலூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பர்கூர் அரசு கலைக் கல்லூரி (மகளிர்), அரியலூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி; நாமக்கல் மாவட்டம் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக் கல்லூரி (மகளிர்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி (மகளிர்), சிவகங்கை மாவட்டம் அரசு கலைக் கல்லூரி (மகளிர்), கோயம்புத்தூர் மாவட்டம் அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (மகளிர்), தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரி (மகளிர்) மற்றும் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 12 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், நூலகங்கள், மாணவியர் விடுதி உள்ளிட்ட புதிய கட்டடங்கள்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி மாவட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் 8 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் என மொத்தம் 110 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நிதியமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.