எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர், செப். 14 - பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை நேபாளத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகருக்குக் கடத்தியவர்களுக்கு உதவிகள் செய்த மெஹ்ராஜூதீன் தண்ட் என்ற தீவிரவாதியை ஜம்மு-காஷ்மீர் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ்ஈடுபட்டு வரும் தண்ட், நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்புகளிலும் தொடர்புடையவன் ஆவான். கடந்த பல ஆண்டுகளாக நேபாளத்தில் வாழ்ந்து வந்த தண்ட், கந்தகார் விமானக் கடத்தல்காரர்களுக்கு உதவிய முக்கிய நபர் ஆவான். இந்திய விமானத்தைக் கடத்திய 5 தீவிரவாதிகளுக்கும் தண்ட் தான், போலி ஆவணங்களைத் தயாரித்து நேபாளத்துக்கு பயணம் செய்ய உதவினான். இதையடுத்து இவனை மத்திய உளவுப் பிரிவுகள் தொடர்ந்து தேடி வந்தன.
1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நேபாளத்தில் இருந்து கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், இந்திய வான்வெளிக்குள் நுழைந்தவுடன் அதிலிருந்த 5 தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தினர்.
முதலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நிறுத்தி விமானத்தில் எரிபொருளை நிரப்ப வைத்த தீவிரவாதிகள், பின்னர் அதை லாகூரில் தரையிறக்கினர். இதையடுத்து துபாய்க்கு கொண்டு செல்லப்பட்ட அந்த விமானத்தில் இருந்த சில பயணிகளை விடுவித்த தீவிரவாதிகள், அதை ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகருக்குக் கொண்டு சென்றனர்.
முன்னதாக விமானத்தில் வைத்து ஒருவரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள், அவரது உடலை லாகூர் விமான நிலையத்தில் வீசினர். கந்தகார் நகரில் அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களின் உதவியோடு கிட்டத்தட்ட ஒரு வாரம் தீவிரவாதிகள் பிடியில் இருந்தது அந்த விமானமும் பயணிகளும்.
இதையடுத்து தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று ஜெய்ஷ் ஏ முகம்மத் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார், அகமத் ஒமர் சயீத் சேக் மற்றும் இன்னொரு தீவிரவாதியை அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு விடுவித்தது.
தீவிரவாதிகளுடன் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் விமானத்திலேயே சென்று அவர்களை தலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தையும் பயணிகளையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார். இந் நிலையில் இந்த விமானக் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து தேடப்பட்டு வந்த தண்ட் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சிக்கியுள்ளான்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினால் பயிற்சி அளிக்கப்பட்ட தண்ட், பின்னர் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவி வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


