எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் வழியாகச் செல்லும் டிரான்சிட் பயணத்துக்கான தடை இன்று (5-ம் தேதி) முதல் நீக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியவுடன் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு தெற்காசிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்தை ஐக்கிய அரபு அமீரகம் தடை செய்தது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருவதையடுத்து, மீண்டும் டிரான்சிட் விமானப் போக்குவரத்தைத் தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஆனால் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக வேறு நாட்டுக்குச் செல்லும் டிரான்சிட் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வரும் பயணிகள் பயண நேரத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதன் பின்புதான் பயணிகள் இறுதியாகச் செல்லும் இடத்துக்கான அனுமதி வழங்கப்படும். டிரான்சிட் மூலம் செல்லும் பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்களில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நேபாளம், இலங்கை, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தும், டிரான்சிட் அனுமதியும் இல்லை. அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள், வசிப்பவர்கள் இந்த நாடுகளில் இருந்து வந்தால், அதற்குரிய ஆவணங்கள் இருந்தால் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வருவோர் கண்டிப்பாக முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
இந்த நாடுகளில் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் பயண நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.
அதேசமயம், மருத்துவம், கல்வி, மர்றும் அரசுத்துறை, மருத்துவ சிகிச்சையை நிறைவு செய்யவருவோர், படிப்பை நிறைவு செய்ய வருவோருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதிலிருந்து மனிதநேய அடிப்படையில் விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


