எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டெல்லி: மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் குழந்தைகளை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
மனைவியை விவாகரத்து செய்த கணவர் தன் மனைவி மறறும் இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு 4 கோடி ரூபாய் வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கணவர் பணத்தை தரவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனைவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சந்திரசூட் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், விவாகரத்து செய்யும் போது குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் என் கட்சிகாரர் நிறைவேற்றியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக அவரது வியாபாரம் மந்தமாகி விட்டது. அவரால் 4 கோடி ரூபாயை தர முடியுவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:-
மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது. குழந்தைகளை பெற்றவர் என்ற முறையில் அவர்களை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உண்டு. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட 4 கோடி ரூபாயை மனைவியிடம் வழங்க முடியாததற்கு நிதி நெருக்கடி காரணங்களை ஏற்க முடியாது. அதனால் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாயையும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 3 கோடி ரூபாயையும் விவாகரத்து செய்த மனைவியிடம் வழங்க கணவருக்கு உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


