எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டோக்கியோ : 160 நாடுகளில் இருந்து 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டோக்கியோ 'பாராலிம்பிக்' போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்குகின்றன. துவக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார்.
4,400 வீரர்கள்...
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஏறக்குறைய 160 நாடுகளைச் சேர்ந்த 4, 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக பாராஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள டோக்கியோ பாராஒலிம்பிக் துவக்க விழாவில் மாரியப்பன் உட்பட 5 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்.
பாராலிம்பிக் போட்டி...
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அதற்கு அடுத்து 1960-ல் 23 நாடுகளில் இருந்து 400-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கோனர் பங்கேற்றனர்.
ஓராண்டு தள்ளி...
ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல்பாதிப்புக்கு ஏற்ப அவர்கள் விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. டோக்கியோவில் ஏற்கெனவே 1964-ல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. புதிதாக தற்போது பாட்மிண்டன், டேக்வாண்டோ போன்ற விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ரசிகர்கள் இன்றி...
கொரோனா பரவல் அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் சார்பில் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையில் வரம்பு கிடையாது.
540 போட்டிகள்...
வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, கோல்பால், ஜூடோ, பாராகனோ, பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடக்க உள்ளன.
54 வீரர்கள்...
இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் களம் இறங்குகிறார்கள். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கில் 2 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்திய அணியினர் வென்றிருந்தனர். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெல்லும் பதக்கங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் எனக் கருதப்படுகிறது.
மாரியப்பன் தங்கவேலு...
கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தேவேந்திரா ஜஹாரியாவும், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றனர். தற்போது இந்திய அணியில் உலக சாதனையாளர்கள் சந்தீப் சௌதரி, சுமித் ஆகியோர் தடகள அணியில் உள்ளனர். பாட்மிண்டனில் 4 முறை உலக சாம்பியன் பிரமோத் பகத், சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது.
துப்பாக்கி சுடுதல்...
டேக்வாண்டோ மகளிர் பிரிவில் உலகப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை அருணா தன்வர் டோக்கியோவில் பதக்கம் வெல்லவார் என நம்பப்படுகிறது. துப்பாக்கி சுடுதலில் 2021 உலகப் போட்டியில் தங்கம் வென்ற ரூபினா பிரான்ஸிஸ் பதக்கம் பட்டியலில் இடம்பெறுவார் என தெரிகிறது. மேலும் எப்-46 ஈட்டி எறிதலில் ரஞ்சித் பாட்டி, சந்தீப் சஞ்சய் சர்க்கார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குண்டு எறிதல்...
உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார், வருண் சிங்கும், டி-47 உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், ராம்பால், டி-64-ல் பிரவீண்குமார், எப்-51 கிளப் த்ரோவில் அமீத்குமார், தரம்பீர், எப்-57 குண்டு எறிதலில் சோனம் ராணா, எப் 35-இல் அரவிந்த், எப்-56 வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா, எப்-56-இல் வினோத்குமார் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
வில்வித்தை...
மகளிர் பிரிவில் எப்-51 கிளப் த்ரோவில் ஏக்தா பயன், கஷிஷ் லக்ரா, டி13 100 மீட்டரில் சிம்ரன், எப்-34 குண்டு எறிதலில் பாக்யஸ்ரீ ஜாதவ் இடம் பெறுகின்றனர். வில்வித்தையில் ஹர்விந்தர் சிங், விவேக் சிகாரா, ராகேஷ் குமார், ஷியாம் சுந்தர் ஆடவர் பிரிவிலும், ஜோதி பாலியான் மகளிர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.
பாட்மிண்டன்...
பாட்மிண்டன் ஆடவர் பிரிவில் பிரமோத் பகத், மனோஜ் சர்க்கார், தருண் தில்லான், சுஹாஸ் யதிராஜ், கிருஷ்ணாவும், மகளிர் பிரிவில் பால் பார்மர், பலாக் கோலி (இரட்டையர்) பங்கேற்கின்றனர். முதன் முதலாக இந்தியா சார்பில் பாரா கனோயிங்கில் பிரச்சி யாதவ் பங்கேற்கிறார்.
பவர் லிஃப்டிங்...
பவர் லிஃப்டிங்கில் மகளிர் பிரிவில் சகீனா கதுன், ஆடவர் பிரிவில் ஜெய்தீப் தேஸ்வால் பவர் லிஃப்டிங்கில் பங்கேற்கின்றனர். துப்பாக்கிச் சுடுதலில் ஆகாஷ், மணிஷ் நர்வால், தீபிந்தர் சிங், ராகுல் ஜாக்கர், சிங்ராஜ், சித்தார்த்த பாபு, ஸ்வரூப் உஹால்கர், தீபக் சைனி ஆடவர் பிரிவிலும், ரூபினா பிரான்ஸிஸ், அவனி லேக்ரா மகளிர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.
டேபிள் டென்னிஸ்...
நீச்சல் ஆடவர் பிரிவில் நிரஞ்சன் முகுந்தன், சுயாஷ் ஜாதவ் கலந்து கொள்கின்றனர். டேபிள் டென்னிஸ், மகளிர் பிரிவில் சோனல்பென் பட்டேல், பவீனா பட்டேல் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
கொரோனா தொற்று...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு ஜப்பானில் நாளுக்கு நாள் எகிறி வருவது போட்டி அமைப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதில் டோக்கியோவில் மட்டும் 5,074 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். பாராஒலிம்பிக் தொடர்புடையவர்கள் இதுவரை 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடும் கட்டுப்பாடு...
இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக போட்டி அமைப்பு குழுவின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார். பாராஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பணியாளர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இனி வீரர், வீராங்கனைகளை போல் அவர்களுக்கும் தினந்தோறும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் அங்கு அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு...
இதற்கிடையே ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாராஒலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று நேரம், அட்டவணை வெளியீடு
19 Sep 2025துபாய் : சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 அணிகள் பங்கேற்ற...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
லக்னோவில் நடந்த இந்தியா 'ஏ'-ஆஸி. 'ஏ' டெஸ்ட் போட்டி டிரா
19 Sep 2025லக்னோ : இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே லக்னோவில் நடந்த அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
சபரிமலை ஐயப்பன் கோவில் சீரமைப்பு ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
20 Sep 2025திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.