எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டோக்கியோ : 160 நாடுகளில் இருந்து 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டோக்கியோ 'பாராலிம்பிக்' போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்குகின்றன. துவக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார்.
4,400 வீரர்கள்...
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஏறக்குறைய 160 நாடுகளைச் சேர்ந்த 4, 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக பாராஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள டோக்கியோ பாராஒலிம்பிக் துவக்க விழாவில் மாரியப்பன் உட்பட 5 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்.
பாராலிம்பிக் போட்டி...
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அதற்கு அடுத்து 1960-ல் 23 நாடுகளில் இருந்து 400-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கோனர் பங்கேற்றனர்.
ஓராண்டு தள்ளி...
ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல்பாதிப்புக்கு ஏற்ப அவர்கள் விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. டோக்கியோவில் ஏற்கெனவே 1964-ல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. புதிதாக தற்போது பாட்மிண்டன், டேக்வாண்டோ போன்ற விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ரசிகர்கள் இன்றி...
கொரோனா பரவல் அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் சார்பில் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையில் வரம்பு கிடையாது.
540 போட்டிகள்...
வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, கோல்பால், ஜூடோ, பாராகனோ, பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடக்க உள்ளன.
54 வீரர்கள்...
இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் களம் இறங்குகிறார்கள். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கில் 2 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்திய அணியினர் வென்றிருந்தனர். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெல்லும் பதக்கங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் எனக் கருதப்படுகிறது.
மாரியப்பன் தங்கவேலு...
கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தேவேந்திரா ஜஹாரியாவும், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றனர். தற்போது இந்திய அணியில் உலக சாதனையாளர்கள் சந்தீப் சௌதரி, சுமித் ஆகியோர் தடகள அணியில் உள்ளனர். பாட்மிண்டனில் 4 முறை உலக சாம்பியன் பிரமோத் பகத், சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது.
துப்பாக்கி சுடுதல்...
டேக்வாண்டோ மகளிர் பிரிவில் உலகப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை அருணா தன்வர் டோக்கியோவில் பதக்கம் வெல்லவார் என நம்பப்படுகிறது. துப்பாக்கி சுடுதலில் 2021 உலகப் போட்டியில் தங்கம் வென்ற ரூபினா பிரான்ஸிஸ் பதக்கம் பட்டியலில் இடம்பெறுவார் என தெரிகிறது. மேலும் எப்-46 ஈட்டி எறிதலில் ரஞ்சித் பாட்டி, சந்தீப் சஞ்சய் சர்க்கார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குண்டு எறிதல்...
உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார், வருண் சிங்கும், டி-47 உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், ராம்பால், டி-64-ல் பிரவீண்குமார், எப்-51 கிளப் த்ரோவில் அமீத்குமார், தரம்பீர், எப்-57 குண்டு எறிதலில் சோனம் ராணா, எப் 35-இல் அரவிந்த், எப்-56 வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா, எப்-56-இல் வினோத்குமார் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
வில்வித்தை...
மகளிர் பிரிவில் எப்-51 கிளப் த்ரோவில் ஏக்தா பயன், கஷிஷ் லக்ரா, டி13 100 மீட்டரில் சிம்ரன், எப்-34 குண்டு எறிதலில் பாக்யஸ்ரீ ஜாதவ் இடம் பெறுகின்றனர். வில்வித்தையில் ஹர்விந்தர் சிங், விவேக் சிகாரா, ராகேஷ் குமார், ஷியாம் சுந்தர் ஆடவர் பிரிவிலும், ஜோதி பாலியான் மகளிர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.
பாட்மிண்டன்...
பாட்மிண்டன் ஆடவர் பிரிவில் பிரமோத் பகத், மனோஜ் சர்க்கார், தருண் தில்லான், சுஹாஸ் யதிராஜ், கிருஷ்ணாவும், மகளிர் பிரிவில் பால் பார்மர், பலாக் கோலி (இரட்டையர்) பங்கேற்கின்றனர். முதன் முதலாக இந்தியா சார்பில் பாரா கனோயிங்கில் பிரச்சி யாதவ் பங்கேற்கிறார்.
பவர் லிஃப்டிங்...
பவர் லிஃப்டிங்கில் மகளிர் பிரிவில் சகீனா கதுன், ஆடவர் பிரிவில் ஜெய்தீப் தேஸ்வால் பவர் லிஃப்டிங்கில் பங்கேற்கின்றனர். துப்பாக்கிச் சுடுதலில் ஆகாஷ், மணிஷ் நர்வால், தீபிந்தர் சிங், ராகுல் ஜாக்கர், சிங்ராஜ், சித்தார்த்த பாபு, ஸ்வரூப் உஹால்கர், தீபக் சைனி ஆடவர் பிரிவிலும், ரூபினா பிரான்ஸிஸ், அவனி லேக்ரா மகளிர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.
டேபிள் டென்னிஸ்...
நீச்சல் ஆடவர் பிரிவில் நிரஞ்சன் முகுந்தன், சுயாஷ் ஜாதவ் கலந்து கொள்கின்றனர். டேபிள் டென்னிஸ், மகளிர் பிரிவில் சோனல்பென் பட்டேல், பவீனா பட்டேல் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
கொரோனா தொற்று...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு ஜப்பானில் நாளுக்கு நாள் எகிறி வருவது போட்டி அமைப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதில் டோக்கியோவில் மட்டும் 5,074 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். பாராஒலிம்பிக் தொடர்புடையவர்கள் இதுவரை 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடும் கட்டுப்பாடு...
இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக போட்டி அமைப்பு குழுவின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார். பாராஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பணியாளர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இனி வீரர், வீராங்கனைகளை போல் அவர்களுக்கும் தினந்தோறும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் அங்கு அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு...
இதற்கிடையே ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாராஒலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வங்கதேசம் செல்ல பி.சி.சி.ஐ. மறுப்பு? - ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதில் சிக்கல்
19 Jul 2025மும்பை : ஆலோசனை கூட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), வங்காளதேசம் செல்ல மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
உண்மையான சோதனையே இனிதான்: கிரேக் சேப்பல்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித
-
அசாருதீன் வீட்டில் திருட்டு
19 Jul 2025இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
-
இங்கி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: கருண் நாயர் இடம் பெறுவாரா? - உதவி பயிற்சியாளர் விளக்கம்
19 Jul 2025மான்செஸ்டர் : 4வது டெஸ்ட் போட்டியில், கருண் நாயர் இடம் பெறுவாரா என்பது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
-
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்
19 Jul 2025லண்டன் : கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.