எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
நேற்று சட்டப்பேரவை கூடியதும், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (திருத்தம் மற்றும் நீக்கம்) அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். இதில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இதனைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைவாணர் அரங்கத்துக்கு முன்பாக இருந்த சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஓ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க.வினரைக் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ். கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்துக்குத் தமிழக ஆளுநர் மற்றும் சிண்டிகேட் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. அரசு ஜெயலலிதாவின் பெயரை நீக்கிவிட்டு அப்பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வந்திருக்கிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே நாங்கள் எதிர்த்தோம். பேசுவதற்குரிய வாய்ப்பையும் கேட்டோம்.
2011-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்துள்ளார். இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்ய முடியாத சாதனைகளை ஜெயலலிதா நிகழ்த்திக் காட்டியுள்ளார். எத்தகைய திட்டங்களைத் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை செயல்படுத்தினால், மாணவர்கள் படித்து மாநிலம் முன்னேறும் என்பதை ஆராய்ந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
மாநில மொத்த வருவாயில் 4-ல் ஒரு பங்கு நிதியைக் கல்வித்துறைக்கு ஒதுக்கியவர். உதாரணமாக, மாநிலத்தின் சொந்த வருவாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் என வைத்துக்கொண்டால், அதில் சுமார் 33,000 கோடி ரூபாய் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.
மாணவர்களுக்கு 16 வகையான கல்வி உபகரணங்களைத் தந்தது, இலவசக் கல்வி, பாடப் புத்தகம், சைக்கிள், சீருடை, காலணி, மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்கள் எனப் பலவற்றைத் தந்தவர் ஜெயலலிதா. 2011-ல் 27சதவீதம் ஆக இருந்த உயர்கல்வி சேர்க்கை, ஜெயலலிதாவின் சீரிய பணிகளின் காரணமாக 52சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. தேசிய சராசரி 24சதவீதம் என்ற நிலையில், நம் மாநிலத்தில் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதற்குக் காரணம் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை.
அவர் கல்வித் தாயாக விளங்கியவர். பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோருக்கு சிரமம் ஏற்படாமல், மாணவர்களுக்குத் தாயாக, தந்தையாக, ஆசிரியராக இருந்தவர் ஜெயலலிதா. பல்வேறு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கியவர் ஜெயலலிதா. அவரின் பெயரைப் பல்கலைக்கழகத்துக்கு வைப்பது சாலச் சிறந்தது. அதனை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கின்றனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் எவ்வளவு தாழ்ந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையால் இழுத்து மூடும் அளவுக்கு இருந்தபோது, அப்பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றியவர் ஜெயலலிதாதான். அப்பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் ஜெயலலிதா. ஒவ்வொரு ஆண்டும் தேவையான நிதியை அளித்து மறுமலர்ச்சியை உருவாக்கியவர்.
ஜெயலலிதாவின் பெயர் இருக்கக் கூடாது என்கிற காழ்ப்புணர்ச்சியைப் பொதுமக்களும், மாணவர்களும், அ.தி.மு.க.வினரும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டை எதிர்த்திருக்கின்றனர். ஜெயலலிதா பல்கலைக்கழகம் இப்போதுதான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி, இடம் ஒதுக்கீட்டை அரசுதான் செய்யவேண்டும்.
இவ்வாறு ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.