எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: அக்.13 - குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் கமிஷன் வாங்கி மோசடி செய்த அப்ரோ நிறுவன அதிபர் ஏசுதாஸை பெங்களூரில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் அப்ரோ என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் இதன் கிளை தொடங்கப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுவினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று அப்ரோ நிறுவனம் விளம்பரம் செய்தது. இதற்காக பொதுமக்களிடம் முன்பணமும் பெறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் வழங்குவதாக அந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆனால், அப்ரோ நிறுவனத்தின் விளம்பரத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிரடியாக விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்து முறைகேடாக குறைந்த வட்டியில் கடன் தருவதாக மோசடி செய்த அப்ரோ நிறுவனத்தின் நிர்வாகிகள் சிலரை 2 மாதங்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தனர். நிறுவன உரிமையாளர் ஏசுதாஸ் மட்டும் பிடிபடாமல் இருந்தார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தமிழகம் முழுவதும் ஏசுதாசை தொடர்ந்து தேடி வந்தனர். இதை தெரிந்து கொண்ட ஏசுதாஸ், வெளி மாநிலத்துக்கு தப்பினார். இதையடுத்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று தேடினர். இந்நிலையில், பெங்களூரில் ஏசுதாஸ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு மாறுவேடத்தில் விரைந்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு ஏசுதாஸ் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பாளர் தேவி ஆகியோரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இருவரையும் சென்னை கொண்டு வந்தனர். அவர்களிடம் முறைப்படி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எத்தனை பேரிடம், எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது என்பது விசாரணை நடைபெறுகிறது.
அப்ரோ டிரஸ்ட்க்கு எதிராக 27 மகளிர் சுய உதவி குழுக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த புகாரின்படி பல மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் சுமார் 2 கோடியே 12 லட்சத்து 63 ஆயிரத்து 20 ரூபாய் வரை வசூலித்து பொதுமக்களை ஏமாற்றியது தெரிய வருகிறது. மேலும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆகையால் ஏமாற்றப்பட்டவர்கள் மேலும் அதிகரிப்பதால் ஏமாற்றப்பட்ட பணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிறுவனத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அப்ரோ டிரஸ்ட் நிறுவனம் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் சுமார் பல கோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என விசாரணையில் தெரிய வருகிறது. தலைமறைவாக இருந்த அப்ரோ டிரஸ்ட் நிறுவன அதிபர் ஏசுதாசை கைது செய்த தனிப்படையினரை மாநகர கமிஷனர் எஸ்.ஜார்ஜ் பாராட்டினார்.
பொது மக்கள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் இதுபோன்ற போலியான நிதிநிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
06 Dec 2025சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.


