எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ் அணை தற்போது 120 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்துக்கு விநாடிக்கு 6,205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த 2 வாரங்களாக குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 10,097 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 3 அடியே உள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து தமிழகத்துக்கு விநா டிக்கு 6,205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதுகுறித்து காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டை காட்டிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு குறைந்த அளவுதான் மழை பொழிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அணை 120 அடியை கடந்தது, கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் 120 அடியை கடந்தது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு 40 டி.எம்.சி நீரைதிறந்துவிட வேண்டும். கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறந்து விடுவதால், அணை நீர்மட்டம் உயர்வதில் சிரமம் ஏற்படுகிறது. தொடர்ந்து கனமழை பொழிந்தால் கே.ஆர்.எஸ் அணை இன்னும் சில தினங்களில் முழு கொள்ளளவை எட்டும்'' என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


