எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காற்றின் தரம் மிகவும் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலம் (என்சிஆர்) பகுதிகளில் கட்டுமானப் பணிகளைச் செய்வதற்குத் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால் ஊதியமில்லாமல் சிரமப்படும் தொழிலாளர்களுக்கு, மாநிலங்கள், தொழிலாளர்கள் சிறப்பு செஸ் மூலம் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடக் கோரி ஆதித்யநா துபே என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின்போது, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரம் ஓரளவுக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி முதல் கட்டுமானப் பணிகளைச் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்திருந்தது.
ஆனால், இடைப்பட்ட நாட்களில் காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நடத்தத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதுகுறித்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், சூர்யகாந்த் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.,
“காற்றின் தரம் குறைந்து வருவதையடுத்து, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியளித்த உத்தரவைத் திரும்பப் பெறுகிறோம். காற்றுதர மேலாண்மை ஆணையம், கடந்த காலத்தில் இருந்த புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து காற்றின் தரம் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டும். காற்றின் தரம் மோசமடையும் வரை காத்திருப்பதற்கு பதிலாக, காற்றின் தரம் மோசமடைவதை எதிர்பார்த்துத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். இதற்காகப் புள்ளியியல் பிரிவு, வானிலை மையத்தைச் சேர்ந்த வல்லுநர்களை இதில் ஈடுபடுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஆதலால், டெல்லி, என்சிஆர், உ.பி. ஹரியாணா, பஞ்சாப் ராஜஸ்தான் மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த 22-ம் தேதி நாங்கள் பிறப்பித்த டெல்லி, என்சிஆர் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியளித்ததைத் திரும்பப் பெறுகிறோம். அதேசமயம், காற்று மாசு இல்லாத பிற பணிகளான பிளம்பிங் பணிகள், உள்ளரங்கு அலங்காரங்கள், மின்சாரப் பணிகள், தச்சுப் பணி ஆகியவற்றை மேற்கொள்ளத் தடையில்லை.
தொழிலாளர் செஸ் என்ற பெயரில் மாநிலங்கள் வசூலித்த தொகையிலிருந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட காலத்தில் வழங்கிட வேண்டும். காற்றின் மாசு அதிகரித்து வருவதைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, தடுப்பு நடவடிக்கைள் எடுப்பது போன்றவற்றைக் காற்றுதர மேலாண்மை ஆணையம் எடுக்க வேண்டும். இந்த வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்மையை ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள்: இ.பி.எஸ்.
11 Jan 2026சென்னை, ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
கருக்கலைப்பு விவகாரம்: ஐகோர்ட் முக்கிய கருத்து
11 Jan 2026டெல்லி, கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
ராகுல் நாளை கூடலூா் வருகை
11 Jan 2026நீலகிரி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு நாளை வருகை தரவுள்ளாா்.
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.


