Idhayam Matrimony

மதுகோடாவின் ரூ.130 கோடி சொத்து விரைவில் பறிமுதல்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.13 - ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா முறைகேடாக சேர்த்து வைத்திருக்கும் ரூ. 130 கோடி சொத்து மதிப்பை பறிமுதல் செய்ய மத்திய சட்ட அமுலாக்க பிரிவு அனுமதியை பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக மதுகோடா இருந்தார். இவர் பதவியில் இருந்தபோது அவரும் அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் முறைகேடான முறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்துள்ளனர். இதனையொட்டி இவர் மீதும் அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் மீதும் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுகோடா மற்றும் அவரது உதவியாளர்களின் சொத்தில் ரூபாய் 130 கோடி சொத்தை பறிமுதல் செய்ய பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஆணையத்தின் அனுமதியை மத்திய சட்ட அமுலாக்க பிரிவு அனுமதியை பெற்றுள்ளது. இந்த மாதிரி சட்ட அமுலாக்க பிரிவு அனுமதி பெற்றிருப்பது முதல் தடவையாகும். மதுகோடாவும் அவரது உதவியாளர்களும் ரூ. 200 கோடிக்கும் மேல் முறைகேடாகவும் மோசடி செய்தும் சொத்து குவித்துள்ளனர். இந்த ரூ.130 கோடி போக மீதமுள்ள சொத்தையும் பறிமுதல் செய்ய சட்ட அமுலாக்க பிரிவு அனுமதியை பெறலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago