எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவுதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.,
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இருவரும் வெளிநாட்டினர் ஆவர். அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடைமுறை பின்பற்றப்படும்.
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன; கடுமையான அறிகுறிகள் இல்லை. ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம். தொற்று உறுதியானால் அடுத்தகட்ட சிகிச்சை, இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் இதுவரை 373 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. ஒமைக்ரான் கொரோனாவை கண்டு அச்சப்படவேண்டாம். அதேவேளை விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


