எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், நவ. - 7 - பல ஆண்டுகளுக்கு பிறகு கடும் போட்டி நிலவும் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முடிவுக்கு வந்தது. இதுவரை பல மாநிலங்களில் நேரிடையாகவும், தபால் மூலமாகவும் முன் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வந்தன. அவற்றில், ஒபாமா முண்ணனி வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடித்தட்டு, நடுத்தர மக்களே, முன் வாக்குப்பதிவுகளில் அதிகம் கலந்து கொள்வதால் இது எதிர்பார்த்த செய்தியாகத்தான் இருக்கிறது. 2000 ம் வருட தேர்தலில் டிப்ளோரிடாவில் வெறும் 547 வாக்குகள் அதிகமாக பெற்று ஜார்ஜ் புஷ் அதிபர் பதவியை கைப்பற்றினார். தற்போதைய முன் வாக்குப் பதிவில் டிப்ளோரிடாவில் 47 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 42 சதவீதம் ஒபாமா கட்சியினரும், 39.5 சதவீதம் ராம்னி கட்சியினரும் 18 சதவீதம் எந்த கட்சியையும் சாராதவர்கள். பெரும் கூட்டம் இருந்ததால், சில பகுதிகளில் முன்வாக்குப் பதிவு நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதுவரை ஏழு லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ள நெவடாவில் ஒபாமா கட்சியினர் 44 சதவீதமும், ராம்னி கட்சியினர் 37 சதவீதமும் வாக்களித்துள்ளனர். எந்த கட்சியையும் சாராதவர்கள் 19 சதவீதம். இன்னொரு முக்கியமான திருப்புமுனை மாநிலமான ஐயோவாவிலும் ஒபாமா கட்சியினர் 42 சதவீதம், ராம்னி கட்சியினர் 32 சதவீதம், பொது வாக்காளர்கள் 25.6 சதவீதம் என 6 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில், உட்கட்சி தேர்தல் முதல் அதிபர் தேர்தல் வரை ஒபாமாவுக்கு ஐயோவாவில் பெரும் ஆதரவு கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது ராம்னிக்கு சாதகமாக திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட வட கரோலினா மாநிலத்தில் பதிவான 27 லட்சம் வாக்குகளில் 48 சதவீதம் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியை சார்ந்தவர்கள். 31 சதவீதம் ராம்னியின் குடியரசுக்கட்சியும் மீதம் 21 சதவீதம் பொது வாக்காளர்களும் ஆவர். ஏ.பி.சி - வாஷிங்டன் போஸ்ட் கருத்துக்கணிப்பில் 51 சதவீத்த்தினர் ஒபாமாவின் அதிபர் செயல்பாட்டை அங்கீகரித்துள்ள்னர். பொருளாதார விஷயத்தை யார் சிறப்பாக கையாளக் கூடியவர் என்பதிலும் ராம்னியை விட ஒபாமாவுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. தங்களின் சொந்த விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு, ஒபாமா தான் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என 55 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். நியூ ஹாம்ப்ஷையர் மாநிலத்தில் நடந்த பிரச்சார ஊர்வலத்தில், கடைசிக் கட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறீர்கள் என்று சி.பி.எஸ் செய்தியாளர் கேட்ட போது 'பிராத்தனை செய்கிறோம் என்று பதில் சொல்லியுள்ளார். இன்னொரு தேர்தல் குழு முக்கிய உறுப்பினரோ ஒபாமா கண்டிப்பாக தோல்வி அடைவார் என என்னால் சொல்ல முடியவில்லை என்று கூறியுள்ளதாக சி.பி.எஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
25 Jan 2026தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
25 Jan 2026சென்னை, 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026


