எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.14 - தமிழகம் மற்றும் புதுவையில் 4 அடுக்கு பாதுகாப்புடன் தேர்தல் நேற்று (ஏப்.13) விறுவிறுப்புடனும், அமைதியாகவும் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நேற்று (புதன்கிழமை) ஒரே கட்டமாக நடந்தது. ஓட்டுப்பதிவுக்காக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் அமைத்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஓட்டுப்பதிவுக்காக 66 ஆயிரத்து 799 மின்னணு எந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.அவற்றோடு 62 ஆயிரத்து 461 மைய கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த எந்திரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய, அதிகாலை 6 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்திப் பார்க்கப்பட்டது. காலை 8 மணிக்கு 234 தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு தொடங்கியது. காலை முதலே ஓட்டுப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. 4.71 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.க
ாலை 8 மணிக்குத்தான் ஓட்டுப்பதிவு தொடங்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த போதிலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே 7 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிகளுக்கு வரத் தொடங்கி விட்டனர். சில வாக்குச் சாவடிகளில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் 7.30 மணிக்கே வரிசையாக நின்று இருந்தனர். 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கிய சமயத்தில் வாக்காளர்கள் nullநீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் உக்கிரம் அதிகமாகி விடும் என்ற காரணத்தால் முதியவர்கள் பலர் காலையிலேயே வந்து தங்கள் வாக்களிக்கும் கடமையை செய்து முடித்தனர். முதன் முதலாக வாக்களிக்கும் சுமார் 80 லட்சம் இளைஞர்களும் வாக்குச் சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்திருந்தனர்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் 9 மணிக்குள் அதாவது முதல் ஒரு மணி நேரத்துக்குள் 10 சதவீதம் பேர் தங்களது வாக்கை பதிவு செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. 11.30 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 25 முதல் 30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்ததை காண முடிந்தது. 11 மணி நிலவரப்படி ஸ்ரீரங்கம் தொகுதியில் சுமார் 32 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்காளர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக தேர்தல் கமிஷன் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தது. மாற்றுத் திறனாளிகள் சாய்வுத் தாங்களை பயன்படுத்தி சிக்கலின்றி வாக்களித்தனர். அது போல பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையை பயன்படுத்தி எளிதாக ஓட்டு போட்டனர். வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அதிரடிப்படை மற்றும் மாநில காவல்துறை ஆகிய 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவில் எங்கும் சர்ச்சை ஏற்படவில்லை. ஓட்டுப்பதிவு மிக, மிக அமைதியாக நடந்தது குறிப்பிடத்தக்கது. சில வாக்குச் சாவடிகளில் மட்டும் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் பழுதாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்தகைய வாக்குச் சாவடிகளில் ஓரிரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப் பதிவு தொடங்கியது. மற்றபடி ஓட்டுப்பதிவில் எந்தவித சிறு சலசலப்பும் உண்டாகவில்லை.தேர்தல் அதிகாரிகள் சுமூகமான ஓட்டுப்பதிவை நடத்தி பாராட்டுதல்களை பெற்றனர்.
புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. 30 தொகுதிகளுக்கும் 851 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் nullநீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர். நகர பகுதி மட்டுமின்றி, கிராமப்பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு இருந்தது. மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 151 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் புதுவையில் மட்டும் 68 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், கூடுதலாக போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று சோதனையும் நடத்தினர். பறக்கும் படையினர் அந்தந்த பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கிறதா? வாக்காளர்களிடம் பிரசாரம் நடக்கிறதா? என தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 5 மணிக்கு பிறகு வந்த வாக்காளர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பிறகு அந்த எந்திரங்கள் அனைத்தும் கார்களில் ஏற்றப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக தேர்தல் அமைதியாக நடைபெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளின் ஓட்டுக்கள் 91 இடங்களில் எண்ணப்படும். சென்னையில் 16 தொகுதிகளின் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்படும். மே 13ந்தி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை மின்னணு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
26 Oct 2025பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியயை ஆகியோரை போலீஸார் சனிக்கிழ
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
கணவனுக்கு கத்திக்குத்து: இந்திய வம்சாவளி ஆசிரியை கைது
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.


