எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உ.பி., உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதே போல் மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ந்தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 3 மாநிலங்களில் பிப்ரவரி 14-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் மற்றும் வீட்டோ நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் என்றும் பஞ்சாபில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் தெரிய வந்தது.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் இந்த முறை அந்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்றாலும் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
உ.பி.யில் பா.ஜனதா கூட்டணிக்கு 212 முதல் 231 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், சமாஜ்வாடி கட்சிக்கு 147 முதல் 158 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10-ல் இருந்து 16 தொகுதிகளும், காங்கிரசுக்கு 9-ல் இருந்து 15 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு 2 அல்லது 5 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
உ.பி.யில் அடுத்த முதல்- மந்திரி யார்? என்பதற்கு 52.3 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36.2 சதவீதம் பேர் அகிலேஷ் யாதவுக்கும், 7.2 சதவீதம் பேர் மாயாவதிக்கும், 3.4 சதவீதம் பேர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இதனால் காங்கிரஸ் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும். கருத்து கணிப்பில் பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. அக்கட்சிக்கு 57 முதல் 60 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 43 முதல் 46 தொகுதிகளும், சிரோன்மணி அகாலி தளம் கட்சி 10 முதல் 13 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு வெறும் 3 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் எனவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
உலக சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் கடற்கரை மாநிலமான கோவாவில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பிரமோத் சவாந்த் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறையும் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும் எனவும், அக்கட்சி 20 முதல் 23 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 6 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 6 முதல் 10 இடங்களும், சுயேட்சைகள் 5 முதல் 6 தொகுகளில் வெற்றி பெறும் என்றும் தெரிய வந்துள்ளது.
70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் புஸ்கர்சிங் தாமி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதாவே ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. பா.ஜனதா 42 முதல் 46 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடிக்கும். காங்கிரசுக்கு 12-ல் இருந்து 16 தொகுதிகளும், ஆம்ஆத்மி கட்சிக்கு 8-ல் இருந்து 11 தொகுதிகளும் கிடைக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


