எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொச்சி : நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்டோருக்கு 5 பேருக்கு கேரள ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியது.
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை கடத்தி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரையும் கைது செய்தனர். கைதான திலீப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்த நடிகர் திலீப், நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரியை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நடிகர் திலீப் மேலும் 5 பேர் விசாரணை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக திலீப் மற்றும் ஐந்து பேர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜனவரி 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. எப்ஐஆரில் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் பாலச்சந்திர குமாரின் வாக்குமூலமே தனக்கு எதிரான ஆதாரமாக அரசு தரப்பில் உள்ளது என்றும் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் அதிகாரியை மிரட்டியதாக அரசு தரப்பு கூறியதை நடிகர் மறுத்தார். இந்நிலையில் திலீப் சனிக்கிழமை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை நேற்று விசாரித்த கேரள ஐகோர்ட் “திலீப் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்,நடிகர் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான இரண்டு ஜாமீன்களை தாக்கல் செய்ய வேண்டும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என சில நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


