எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டுப்பாளையம்,பிப்.21 - ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனைவரும் கைதாகும் வரை அ.தி.மு.க. ஓயப்போவதில்லை என்று மேட்டுப்பாளையத்தில் பி.எச். பாண்டியன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பாதாள சாக்கடை திட்டத்தை கிடப்பில் போட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருத்தி, பட்டு நூல் ஏற்றுமதியை தடுக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ம. வேலுச்சாமி, தா. மலரவன், ஓ.கே. சின்னராசு, பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்ட அனைவரும் கண்டன உரை நிகழ்த்தினர். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மார்க்கெட் பகுதிகளில் நகராட்சியே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. மின்மயான பணிகளை நிறைவேற்றத் தவறியது, மேலும் மத்திய, மாநில அரசின் மெத்தனப் போக்கு உள்ளிட்டவற்றை கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.எச். பாண்டியன் கூறியதாவது,
வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய அனைவரும் சிறையினுள் தள்ளப்படப் போவது உறுதி. இவ்விவகாரத்தில் லாபமடைந்த முக்கிய நபர்கள் அனைவரும் கைது செய்யப்படும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை. 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என கைது செய்யப்பட்ட சத்யம் நிறுவன ராஜூ இன்று வரை சிறையில் இருந்து வெளிவர இயலவில்லை எனும் போது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி முறைகேட்டிற்கு எப்போது சிறையில் இருந்து வர முடியும் என நாம் கணக்கிட்டு கொள்ளலாம்.
தி.மு.க.வின் இந்த உலக மகா ஊழலால் தமிழக மக்கள், தமிழக அரசு, தமிழக சட்டமன்றம், இந்திய பாராளுமன்றம் மொத்தத்தில் இந்தியாவே தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று திருச்சியில் நடந்த ஒரு நீதிமன்ற விழாவில் தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட அமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் முன்னிலையில் பேசியது குறித்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது.
அதில் நீதிமன்ற பணிகளில் பொதுப்பணித்துறை 60 சதவீத பணிகளையாவது ஒழுங்காக செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டிட பணிகளில் கமிஷன் பெறாமல் பணிகள் நடைபெற வேண்டும் என்று தமிழக தலைமை நீதிபதியே அனைவரின் முன்னிலையிலும் பேசியுள்ளார். ஆகவே இங்கு நடைபெறும் அனைத்து பணிகளும் கமிஷன் மூலமாகவே நடைபெறுகிறது என அரசுக்கு வேதனையுடன் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் ஏறும் என்றார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.பி. ராஜூ, எல். சுலோசனா மற்றும் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் மைதீன்சேட், நிர்வாகிகள் பி.ஆர்.சி. அருண்குமார், ராஜ்குமார், முன்னாள் எம்.பி. கிருஷ்ணன், காட்டூர் செல்வராஜ், இளைஞரணி ராஜ்குமார், மருத்துவரணி டாக்டர் கணேசன், கிருஷ்ணசாமி, சிவசாமி, வேணுகோபால், ஜெயராமன்,இந்திராணி, மணிமேகலை மகேந்திரன், பழனிச்சாமி, ரேணுகாராஜன், ஆறுமுகசாமி, நாசர், பாலன், சந்தானம், வெள்ளியங்கிரி உட்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி. கந்தசாமி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு: 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்
17 Jul 2025திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி