எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிருப்தி தலைவர்களுடன் சோனியா, ராகுல் சந்திப்பு எதிரொலியால், காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் வருமா என் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி பதவி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து காங்கிரசின் மூத்த தலைவர்கள் கட்சி மேலிடம் மீது அதிருப்தி அடைந்தனர். அவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் கட்சியை மறுசீரமைக்க கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். நேரு குடும்பத்தை சேராத வேறு ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் வீட்டில் அதிருப்தி தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்தனர்.
இந்த கூட்டத்தில் சோனியா காந்திக்கு நெருக்கமான பிருத்விராஜ் சவான், அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடே, ராஜ்பப்பர், மணிசங்கர் அய்யர், குரியன், குல்தீப்சர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் கூறும்போது அனைத்து மாநிலத்தையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் கூட்டுத் தலைமையை பின்பற்றுவதே காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி எடுத்து செல்லும் ஒரே வழி என அவர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியிடம் விளக்கி கூறினார்.
இந்த சூழ்நிலையில் அதிருப்தியாளர்கள் குழுவை சேர்ந்த பூபிந்தர்சிங் ஹூடாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது கட்சியில் மறுசீரமைப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பூபிந்தர்சிங் ஹூடா, குலாம்நபி ஆசாத் மற்றும் அனந்த்சர்மா, கபில் சிபல் ஆகியோரை சந்தித்து ராகுல் காந்தியிடம் பேசியது குறித்து விவாதித்தார்.
இப்படி காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் இந்த சம்பவங்களுக்கு மத்தியில் 5 மாநில தேர்தல் குறித்து ஆராய 5 மூத்த தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்துக்கு ஜிதேந்தர்சிங்கும், உத்தரகாண்ட்டில் அவுனாஷ் பண்டேகரும், கோவாவுக்கு ரஜனி பாட்டிலும், மணிப்பூருக்கு ஜெய்ராம் ரமேஷ், பஞ்சாப்புக்கு அஜய் மக்கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மாநிலங்களில் அமைப்பு ரீதியான மாற்றங்களை செய்யுமாறு சோனியா காந்தி அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லியில் சோனியா காந்தி சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து கேட்டறிந்தார். அதற்கு எம்.பி.க்கள் உள்கட்சி பிரச்சினையாலும், தலைவர்களின் ஒழுங்கீனமான செயல்களாலும் இந்த தோல்வி ஏற்பட்டதாக கூறினார்கள். உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனித்தனியாக சந்தித்து பேசினார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது ஏன் என்பது குறித்து அவர் எல்லோரிடமும் கேட்டறிந்தார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலை பொறுத்தவரை 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தோல்வி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் பாராளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் சூழ்நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி தலைவர்களையும் சந்திக்க சோனியாகாந்தி முடிவு செய்துள்ளார். அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், நேற்று சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது அவர் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், தாங்கள் எடுத்துள்ள பரிந்துரைகள் குறித்தும் விளக்க உள்ளார். இதனால் விரைவில் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.