எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.10 - என்னோட படத்தின் ரிலீஸ் தேதியை நான்தான் அறிவிப்பேன். மற்றவர்களுக்கு இதில் உரிமை இல்லை என்று நிருபர்களிடம் நேற்று கமல்ஹாசன் கூறினார். அதன் விபரம் வருமாறு:-
கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் படம் விஸ்வரூபம். இந்த படம் டி.டி.எச். தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ளது. 96 கோடி ரூபாய் செலவில் படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கி இருப்பதாக கமல் கூறி வருகிறார்.
இந்நிலையில் திரைக்கு வருவதற்கு முன்பு சேட்டிலைட்டில், அதாவது இன்று (10.01.2013) விஸ்வரூபம் வெளியிடுவதாகவும், நாளை (11.01.2013) திரையரங்குகளில் வெளியிடுவதாகவும் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார். விளம்பரங்களிலும் வெளியாகியது. இந்த சூழலில் திரையரங்கு உரிமையாளர்கள் படத்துக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி விஸ்வரூபம் படம் இன்று திரைக்கு வரவில்லை. இந்த பிரச்சினை குறித்து கடந்த சில தினங்களாக திரையரங்கு உரிமையாளர்களுக்கும், கமல்ஹாசனுக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மீடியாக்களில் விஸ்வரூபம் படம் இம்மாதம் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று மதியம் அவரது அலுவலகத்தில் கூறியதாவது:-
விஸ்வரூபம் படம் குறித்து சிலர் தவறான செய்திகளை கூறி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இது என்னோட படம். ரிலீஸ் தேதியை நான் தான் அறிவிப்பேன். மற்றவர்களுக்கு இதில் உரிமை இல்லை. முன்பு டி.டி.எச். வந்தது. அப்போது வர்த்தகம் இல்லை. இப்போது முழுமையாக வர்த்தகம் நடக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 10-ம் தேதி (இன்று) படம் திரைக்கு வர வேண்டும். இண்டஸ்ட்ரி நலன் கருதியும், சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் நான் தான் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தேன். மற்றபடி சிலருடைய மிரட்டலுக்கோ, சிலர் எதிர்ப்பதற்காகவோ பயந்து கொண்டு பட ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கவில்லை. மூன்று மொழிகளில் வெளிவருவதால் அந்தந்த மொழிக்காரர்கள் ஒவ்வொரு தேதியை ராசி எண்களாக பார்க்கிறார்கள். இதுதான் இங்கே பிரச்சினை. முன்பு டி.டி.எச். முறையில் 10-ம் தேதி, தியேட்டருக்கு 11-ம் தேதி என்று தனித்தனியே இருந்ததால் பிரச்சினை எழுந்தது. இப்போது இரண்டும் ஒரே நாளில் திரையிடப்படுகிறது. இதுகுறித்து மற்ற பார்ட்னர்களுடன் கலந்து பேசி வருகிறேன். எப்போது படம் திரைக்கு வரும் என்பதை பிறகு அறிவிக்கிறேன்.
இது நேர்மையான தொழில். என்னுடைய வியாபாரத்தை, அஸ்திவாரத்தை அமைத்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு. யாரும் விஸ்வரூபம் படத்தை கேபிள் மூலம் வெளியிடக் கூடாது. அது சட்ட விரோதம். என்னோட அனுமதி இல்லாமல் விற்பவர்களுக்கு சட்டபடி தண்டனை கிடைக்கும். இதற்கு இந்த அரசாங்கம் உதவி செய்யும் என்று நம்புகிறேன். என் படம் நன்றாக வந்திருக்கிறது என்ற அகந்தை இல்லாமல் சொல்கிறேன். பட ரிலீஸ் தேதியை நான் தான் அறிவிப்பேன். அதே நேரத்தில் என்னுடைய ரசிகர்களை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். தேவையில்லாத பிரச்சினைகள் வந்தால் அவர்கள் எனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



