எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜமுயி, ஏப்.- 19 - பீகார் மாநிலத்தில் கிராமவாசி ஒருவரை ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் தொலைத்தொடர்பு கோபுரங்களையும் அவர்கள் தீவைத்து கொளுத்தினர். பீகார் மாநிலம் ஜமுயி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள தயாள்திக் என்ற கிராமத்திற்கு ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த கிராமத்தில் இருந்த பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு கோபுரங்களை அவர்கள் தீவைத்து கொளுத்தினர். நள்ளிரவு நேரத்தில் அந்த கிராமத்திற்கு வந்த இந்த தீவிரவாதிகள் தூங்கிக்கொண்டிருந்த கிராமவாசிகளை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறிச் செல்லுமாறு உத்தரவிட்டனர். அப்போது பீம்தாக்கூர் என்ற ஒரு கிராமவாசி பீதியில் அலறல் சத்தம் ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மாவோயிஸ்ட்டுகள் அந்த கிராமவாசியை அதே இடத்தில் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த தீவிரவாதிகள் தப்பியோடினர். தப்பியோடிய தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மும்முரமாக நடைபெறுகிறது.
ஜர்காண்ட, பீகார் மண்டல மாவோயிஸ்ட் தீவிரவாத தளபதி சமீர்தாஸ் என்பவரை போலீசார் 3 நாட்களுக்கு முன்பு கைது செய்ததை கண்டித்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 24 மணி நேர பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


