Idhayam Matrimony

இலங்கை உள் விவகாரத்தில் பிறநாடுகள் தலையிட கூடாது..!

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

திருகோணமலை, பிப். 6 - இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே மிரட்டல் விடுத்துள்ளார். இலங்கையின் 65 வது சுதந்திர நாள் விழா திருகோணமலையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மகிந்த ராஜபக்சே பேசுகையில், 

இந்த திருகோணமலை துறைமுகத்தை உலக நாடுகள் கைப்பற்றத் துடிக்கின்றன. நாடு விடுதலை அடைந்த உடனேயே இங்கிலாந்து படையினர் திருகோணமலை துறைமுகத்தை விட்டு வெளியேறவில்லை. சில ஆண்டுகள் கழித்தே வெளியேற்றப்பட்டன. இலங்கை அரசுக்கு எதிராக அடிப்படை இல்லாத தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை இறைமையுள்ள நாடு. ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற்றுள்ள நாடு. இப்படி இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஐ.நா. சபை அனுமதிக்காது. இந்த நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவது ஐ.நா. விதிகளுக்கு விரோதமானது என்றார். வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர உள்ள நிலையில் ராஜபக்சே மிரட்டல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago