எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெக்ஸிகோ, பிப்.7 - மெக்ஸிகோ நாட்டில், ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிகள் 7 பேரை ஒருவர் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மெக்ஸிகோ நகரிலுள்ள அகபுல்கோ என்ற இடத்தில் இச்சம்வம் நடந்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெக்ஸிகோ நகரின் பிரபலமான புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அகபுல்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிளயாபோன்பில் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பங்களாவில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை ஆயுதங்களுடன்
வந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த பகுதிக்கு அதிகாரிகள் விரைந்து சென்று, துப்பாக்கியுடன் வந்த அவனை பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
ஸ்பெயின் நாட்டு தூதுவர்களும், பிற அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்ஸிகோ நாட்டில், குரேரா மாநிலத்தில உள்ள அகபுல்கோவில் ஸ்பெயின் நாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபகாலமாக, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அகபுல்கோவில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் போதிய பாதுதாப்பு அளிக்க 2011-ல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு தீவிரமாக்கியது. இந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களைத் தடுக்கவே இந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


