எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாராபுரம், பிப்.12 - ரூ.27 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க பத்திர விவகாரம் தொடர்பாக, தாராபுரம் கடலை வியாபாரி சென்னை வருமானவரித்துறை விசாரணைக்கு செல்லவில்லை. அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம் இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.27 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான அமெரிக்க பத்திரத்தை கைப்பற்றினார். ஒரு கடலை வியாபாரியிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு சென்னைக்கு அழைத்தனர்.
கடந்த மாதம் 4ந்தேதி அவர் சென்னையில் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி தனது விளக்கத்தை தெரிவித்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் சிக்கிய அமெரிக்க பத்திரம் அனைத்தும் போலியானது என்று அமெரிக்க பார்க் கிளேஸ் வங்கியும், இந்திய நிதி அமைச்சகமும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து சுய விளம்பரம் தேடிக் கொண்டதாக ராமலிங்கம் மீது எந்த நேரத்திலும் வழக்கு தொடரப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
எனவே இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க வியாபாரி ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டு மூலம் முன் ஜாமீன் பெற்றார். சென்னை ஐகோர்ட்டு அவருக்கு 4 முறை முன்ஜாமீன் வழங்கியது. கடைசியாக வழங்கப்பட்ட முன் ஜாமீன் நேற்றுடன் (11ந் தேதி) முடிவடைந்தது. இந்த நிலையில் தான் விசாரணைக்காக சென்னை வருமாறு ராமலிங்கத்துக்கு வருமான வரி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் நேற்று அவர் சென்னை சென்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ராமலிங்கத்திடம் கேட்டபோது என்னால் இந்த வழக்கு விசாரணைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க சென்னையில் நடைபெறும் விசாரணையில் இன்று (நேற்று) ஆஜராவேன். விசாரணைக்கு செல்லக்கூட என்னிடம் பணம் இல்லாவிட்டாலும கடன் வாங்கியாவது சென்று வருவேன் என்று கூறியிருந்தார். எனவே அவர் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் வியாபாரி ராமலிங்கம் சென்னை சென்று ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது.
இது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:
திடீரென்று எனக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தாராபுரம் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். அங்கு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நான் சென்னை விசாரணைக்கு செல்ல இயலவில்லை என்று கூறினார்.
வியாபாரி ராமலிங்கத்துக்கு சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருந்த முன் ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நேரத்தில் சென்னை சென்றால் தன் மீது அடுத்த கட்ட நடவடிக்கையில் வருமான வரித்துறையினர் ஈடுபடலாம் என்ற நோக்கத்தில் ராமலிங்கம் சென்னை செல்வதை தவிர்த்திருக்கலாம் என்றும் ஆஜராக முடியாததற்கான தகவலை தனது வக்கீல் மூலம் தெரிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன் ஜாமீனை மேலும் நீட்டிப்பு செய்து வாங்கிய பின்பு சென்னை சென்று விசாரணைக்கு அவர் ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


