எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாடும் தங்களது அணியை அறிவித்து விட்டன. இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திரும்பி உள்ளார். அதே போல் காயத்தில் இருந்து குணம் அடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியின்போது, உலக கோப்பையில் பும்ரா, ஷகீன் ஷா அப்ரிடி இருவரில் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்து கூறும் போது, ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா முன்னிலையில் உள்ளார் என்று கருதுகிறேன். இதில் அனுபவத்தை வைத்து நான் பதில் கூறுகிறேன். பும்ரா ஆஸ்திரேலியாவில் ஓரளவு கிரிக்கெட் விளையாடி உள்ளார். ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாகவும், பெரிய போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதனால் உலக கோப்பையில் அப்ரிடியை விட பும்ரா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன் என்றார்.
_____________
இந்திய அணியில் ரிஷப் இடம் பெற வேண்டும் - கில்கிறிஸ்ட்
இந்திய அணியில் நிலவி வரும் ஒரே விவாதம் எதைப் பற்றி இருக்கிறது என்றால், ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டுமா அல்லது யாராவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமா என்ற விவாதம். கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை.இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து கூறியதாவது., ரிஷப் பண்ட் மிகவும் தைரியமான வீரர். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம்,அவர் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறன்.அவர்களால் ஒன்றாக விளையாட முடியும், ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். இருவரும் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
_______________
இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டும்: முகமது கையிப் விருப்பம்
இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது கையிப், டெல்லியில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது., அவர்கள் ஒரு நல்ல வலுவான அணியைக் கொண்டிருப்பதாலும், முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியதாலும், இந்திய அணி மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் (இந்தியா) வெற்றி பெற வேண்டும்.சமீபத்தில் ஐசிசி கொண்டு வந்த ஸ்லோ ஓவர் ரேட் விதி மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது. இது சில காலத்திற்கு முன்பு செயல்படுத்தப்பட்டது, ஆனால் வெற்றி பெறவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தேர்வில் சிறந்த 11 பேரை கண்டு பிடிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ரோகித் ஒரு சிறந்த கேப்டன். அவர் ஐபிஎல் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார், ஆனால் இந்திய அணி தேர்வில் சந்தேகம் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
______________
உலகக்கோப்பை ஹாக்கி: ஒடிசா அரசு நிதி ஒதுக்கீடு
2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை முன்பை விட சிறப்பாகவும்,பெரிய அளவிலும் நடத்த ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில் ஹாக்கி உலகக் கோப்பையை முன்னிட்டு , புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் மற்றும் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியை ஒடிசா அரசாங்கம் அதிகரித்துள்ளது.
முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது. இந்த திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.432.45 கோடியில் இருந்து ரூ.875.78 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் எஸ்.சி.மஹாபத்ரா தெரிவித்தார். நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அமைச்சரவை இந்த முடிவை ஒப்புதல் அளித்துள்ளது. பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் ரூர்கேலாவில் 20,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது, இது இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியமாக மாறும்.இதேபோல், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் இந்தியாவின் முதல் உட்புற தடகள அரங்கம், உட்புற நீர்வாழ் மையம், டென்னிஸ் மைதானம், ஹாக்கிக்கான உயர் செயல்திறன் மையம், தங்குமிட வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: வெற்றி கோப்பையை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் நடைபெறும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடருக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
கோவை வன்கொடுமை சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவியை போலீசார் மீட்க தாமதம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
05 Nov 2025சென்னை, கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க தாமதம் ஏன்..? என்று கோவை போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி பற்றி கவலை வேண்டாம்; தானாகவே நடக்கும்: இ.பி.எஸ். பேச்சு
05 Nov 2025சென்னை, கூட்டணி குறித்து கவலை வேண்டாம், அது தானாகவே நடக்கும் என மாவட்டச் செயலாளர்களிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
வேலூரில் ரூ.32 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Nov 2025சென்னை, 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.32 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை முதல்வர்
-
ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
கோவை வன்கொடுமை சம்பவத்தில் கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்
05 Nov 2025கோவை, கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் நம்பிக்கை வெள்ளை மாளிகை தகவல்
05 Nov 2025வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
-
பிலிப்பின்ஸில் கோர தாண்டவம்: கேல்மெகி புயலுக்கு 66 பேர் பலி
05 Nov 2025மணிலா: மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய டைபூன் டினோ என்றழைக்கப்படும் கேல்மெகி புயல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


