எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க்: பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பெர்ட் போர்லாவுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பெர்ட் போர்லாவுக்கு கடந்த ஆகஸ்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது நிறுவனத்தின் கொரோனா சிகிச்சைக்கான பேக்ஸ்லோவிட் என்ற தடுப்பு மருந்தினை அவர் எடுத்து கொண்டார். இந்நிலையில், அவருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நன்றாகவே உள்ளேன். கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவுமின்றி காணப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்த நோயாளிகள் போன்ற, அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு பேக்ஸ்லோவிட் தடுப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். பைசர் மற்றும் அதன் ஜெர்மன் நாட்டு பங்குதாரரான பையோஎன்டெக் நிறுவனத்தின் உற்பத்தியான கொரோனா தடுப்பு மருந்தின் 4 டோஸ்கள் போர்லாவுக்கு அளிக்கப்பட்டு உள்ளன. எனினும், புதிய வகை ஈரிணை திறம் வாய்ந்த பூஸ்டர் தடுப்பூசியை இன்னும் எடுத்து கொள்ளவில்லை என போர்லா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


