எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.27 - ஏற்கனவே ரயில் கட்டணத்தை உயர்த்திவிட்டு மீண்டும் ரயில்வே பட்ஜெட்டில் கட்டணத்தை உயர்த்துவதா? என்று ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் புதிய தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் பட்ஜெட்டுக்கு முன்பே ஏற்கனவே உயர்த்தி விட்டார்கள். இப்போது தட்கல் கட்டணத்தையும், முன்பதிவு கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது மீண்டும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியது போல் ஆகி விட்டது. கடந்த ஆண்டை விட ரயில்வேக்கு நஷ்டம் அதிகரித்து இந்த ஆண்டு 2012- 2013-ல் ஏறத்தாழ ரூ.24,000 கோடியாக இருக்கும் என்கிறார்கள். ஆண்டுதோறும் நஷ்டம் கூடிக்கொண்டே போகிறது. போதிய நிதி ஆதாரம் இல்லை என்று பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் ரயில்வே துறையின் எதிர்காலம் தான் என்ன?
சென்னை- விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை உள்பட பல்வேறு ரயில் திட்டங்கள் இன்னும் முழுமை பெறவில்லை. கொங்கு மண்டல மக்கள் ஈரோடு- பழனி இடையே புதிய ரயில் பாதை அமைக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதுகுறித்து அறிவிப்பு இல்லை. ஏற்கனவே தொடங்கப்பட்ட ரயில் திட்டங்கள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், புதிய திட்டங்களை எந்த வகையில் செயல்படுத்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. 1,52,000 பேருக்கு புதிய வேலை என்று அறிவித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் அறிவித்தபடி ஏற்கனவே வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு 1,52,000 பேருக்கு வேலை வழங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்?
வெளிநாடுகளில் செயல்படுத்தப்படும் அதிநவீன விரைவு ரயில் திட்டங்களை போல் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. பயணிகள், சரக்குப் போக்குவரத்தில் நம் நாட்டில் முதலிடம் பெறும் ரயில்வேத்துறை உலகின் முன்னணி நாடுகளுக்கு இணையாக ரயில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை பெற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனைகள் பட்ஜெட்டில் இல்லாதது வருத்தமளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
-
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்..!
08 Jan 2026புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.


