எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,பிப்.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தனது மகள் கனிமொழி சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைக்கவே மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதாக நாடகமாடியுள்ளார் கருணாநிதி என்று முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.
தென் சென்னை மாவட்டம் மயிலை, 144 வது வட்டம் சார்பில் ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, தி.மு.க. வின் அராஜகப் போக்கு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. மயிலை பகுதி செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் மைத்ரேயன் எம்.பி. அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான முத்துமணி, தென் சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன் எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.ஆர். வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது,
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி அளவிற்கு இழப்பை ஏற்படுத்தி ஊழலுக்கு காரணமான தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கடந்த 2 ம் தேதி கைது செய்யப்பட்டு 14 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடைபெற்று அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரோடு அவரது முன்னாள் துறை செயலாளர் மற்றும் சிறப்பு செயலாளர் ஆகிய இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும் ராசாவை காட்டிலும் உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் 4 வது நபராக இந்த விவகாரத்தில் ராசா காட்டிய சலுகையால் பெரும் பலனடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிர்வாகி ஷாகித் பல்வா, கலைஞர் டி.விக்கு ரூ 214 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே எந்த நேரமும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழி சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்படலாம் என பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
மீனவர்கள் பிரச்சினையில் தி.மு.க. தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கருணாநிதி அவசர அவசரமாக ஒரு போராட்ட அறிவிப்பை அறிவித்து சென்னையில் கனிமொழி தலைமையில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டது எல்லாம் ஸ்பெக்ட்ரம் விசாரணையின் எதிரொலியாக சி.பி.ஐ. எந்த நேரமும் விசாரணைக்கு அழைக்கலாம் என்று கருதியதே காரணம். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது மகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை மக்கள் மத்தியில் திசை திருப்பவே உள்நோக்கத்தோடு இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
மீனவர்களுக்காக தி.மு.க. நடத்தும் இந்த நீலிக்கண்ணீர் நாடக போராட்டம் மக்களிடையே எடுபடாது. கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை போராட்டக்காரர்கள் என்று சமீபத்தில் கருணாநிதி வர்ணித்ததை மீனவ சமுதாயம் அவ்வளவு எளிதில் மறக்காது. கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்த போது அவரை மீனவ சமுதாயமும், தமிழ்நாட்டு மக்களும் எப்படி மன்னிக்க முடியும். இந்த துரோகத்தால் தானே கச்சத்தீவு அருகில் நமது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தானே 540 மீனவர்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். அத்தோடு மீனவர்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் சிங்கள படை பறிமுதல் செய்தும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளது என்பதை கருணாநிதியால் மறுக்க முடியுமா?
மீனவர்கள் மீது இலங்கை இனிமேல் தாக்குதல் நடத்தாது என்று மத்திய அரசும், கருணாநிதியும் கூறிய உறுதிமொழிகள் என்னவாயிற்று? காற்றில் பறந்து விட்டதா? மீனவர்களின் அவலம் தீர கருணாநிதி ஏதாவது ஒரு உருப்படியான காரியத்தை செய்தது உண்டா? நிராயுதபாணியாக செல்லும் நமது மீனவர்களை சிங்கள கப்பல் ரோந்து படையினரின் தாக்குதலில் இருந்து தம் உயிர் காக்க தற்காப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவாரா?
கச்சத்தீவை திரும்பப் பெறுவதுதான் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு என்று பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறிய கருத்தை கருணாநிதி ஏற்கிறாரா? இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து ஜெயலலிதா தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் கருணாநிதி மற்றும் மத்திய அரசின் பதில் என்ன? மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் ஆட்சியை ஜெயலலிதாவின் தலைமையில் அமைப்பது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரேமேடையில் பங்கேற்ற தே.ஜ. கூட்டணி தலைவர்கள்
23 Jan 2026செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்ரு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரேமேடையில் பங்கேற்றனர்.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jan 2026சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Jan 2026சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
23 Jan 2026சென்னை, தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.
-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
23 Jan 2026சென்னை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –25-01-2026
24 Jan 2026 -
ஜெர்மனியில் பனிப்பொழிவால் சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு
24 Jan 2026பெர்லின், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
துருக்கியில் நிலநடுக்கம்
24 Jan 2026அங்காரா, துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் பனிப்புயல் எச்சரிக்கை: ஜார்ஜியா, மேரிலேண்ட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் அவசரநிலை
24 Jan 2026ஜார்ஜியா, சுமார் 15 கோடி அமெரிக்க மக்களை பனிப்புயல் தாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
24 Jan 2026ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
-
துபாய் - சென்னை ஏர் இந்தியா விமான சேவை திடீர் நிறுத்தம்
24 Jan 2026சென்னை, 30 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வந்த சென்னை- துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
-
16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்
24 Jan 2026நியூயார்க், அமேசான் நிறுவனம் தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வரும் 27ம் தேதி முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.&
-
நாளை குடியரசு தின விழா: சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை
24 Jan 2026சென்னை, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகராட்சி ஊழியர்களால் வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் குறித்து மேயர் விளக்கம்
24 Jan 2026சென்னை, வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை.
-
அமெரிக்காவில் உறவினர்கள் மற்றும் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
24 Jan 2026ஜார்ஜியா, அமெரிக்காவில் மனைவி மற்றும் உறவினர்களை சுட்டுக்கொன்றதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சு: அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க இங்கிலான்து பிரதமர் வலியுறுத்தல்
24 Jan 2026லண்டன், நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சுக்கு அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி
24 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 82 பேர் மாயமாகியுள்ளனர்.
-
தி.மு.க.வில் இணைகிறாரா..? அமைச்சர் சேகர்பாபு-ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
24 Jan 2026சென்னை, அமைச்சர் சேகர்பாபு - ஓ.பி.எஸ். சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
24 Jan 2026சென்னை, காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாளை குடியரசு தின விழா: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
24 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.
-
வார ராசிபலன்
24 Jan 2026


