எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம்,ஏப்.24 - தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசால் பல இன்னல்களை அனுபவித்த மக்கள் வெகுண்டெழுந்ததன் விளைவே இந்த ஓட்டு பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணம் என்றே தோன்றுகிறது. ஆனால் மாறாக, தி.மு.க. தரப்பில் தங்கள் ஆட்சிக் காலத்தின் போது வழங்கிய இலவச பொருட்களால்தான் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு அளித்துள்ளதாக கனவில் உலா வருகின்றனர்.
கடந்த 13 ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நேரம் கூடுதலாக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, இதுநாள் வரை வாக்களிக்காதவர்களும், புதிய வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களிக்க சென்றதால் தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு புதிய எழுச்சியை மக்களிடம் காண முடிந்தது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட துயரங்களுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் எழுச்சி அடைந்துள்ளனர் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்திருந்தார். மக்களின் இந்த உத்வேக எழுச்சியே ஓட்டுப் பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதுவரை தமிழக தேர்தல்களில் மக்கள் மிகுந்த தெளிவான முடிவுகளையே எடுத்து வந்துள்ளனர். அதிகளவு ஓட்டுப் பதிவு சதவீதத்தினால் கடந்த 1967 ல் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அன்றைய நிலையில் காங்கிரசின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வீறுகொண்டு எழுந்ததே இதற்கு காரணம். அதே நேரம் கழுத்தில் குண்டடிபட்டு கட்டுடன் எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர்களும் ஒரு காரணமாகும். அதைத் தொடர்ந்து 1977 ல் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்ததின் பலனாக அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மக்கள் வெற்றியடைய செய்தனர். இதையடுத்து வந்த தேர்தல்களிலும் எம்.ஜி.ஆருக்கு வெற்றிக் கனியை தொடர்ந்து வாரிக் கொடுத்தனர் தமிழக மக்கள்.
இதையடுத்து 1991 தேர்தலின் போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக வீசிய அலையில் அ.தி.மு.க 163 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்த காலக்கட்டங்களில் பல சிறப்பான திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி பல்வேறு அவதூறு செய்திகளை பரப்பிய தி.மு.க.வினரை நம்பி 1996 ல் தமிழக மக்கள் வாக்களித்து அக்கட்சியை வெற்றி பெற செய்தனர்.
அதையடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையிலும் நிம்மதியாக மக்கள் இருந்தனர். ஆனால் 2006 - 11 தி.மு.க. ஆட்சியில் ஒட்டு மொத்த தமிழகமே பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறது. குறிப்பாக, மின்வெட்டால் பல தொழில்கள் நசிவடைந்ததும், தொழிலாளர்கள் வேலையிழந்ததும், தேர்வு நேரத்தில் மாணவ, மாணவியர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளானதும், அனைத்து பொருட்களின் விலை உயர்வால் வருவாய்க்குள் குடும்பம் நடத்த முடியாமல் பெண்கள் தவிப்புக்குள்ளானதும், கொலை, கொள்ளையால் மக்கள் அச்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளதும் என பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்தனர் மக்கள்.
இந்த நிலையில் கடந்த 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வாக்குப் பதிவில் அதிக ஓட்டு சதவீதமும் தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்று தி.மு.க.வினர் பகல் கனவு கண்டு வருகின்றனர். தமிழக தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, அடுத்து வரும் தேர்தலில் தோல்வியை தழுவியே சென்றுள்ளனர். 1991 ல் அ.தி.மு.க.வும், 1996 ல் தி.மு.க.வும், 2001 ல் அ.தி.மு.க.வும், 2006 ல் தி.மு.க.வும் ஆட்சியை பிடித்துள்ளன. அந்த முறையில் தற்போது 2011 ல் அ.தி.மு.க ஆட்சி என்பது உறுதியான ஒன்றாகி விட்டது.
மேலும் தங்களது தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தாலும், நடந்து முடிந்த தேர்தலில் கதாநாயகனாக விளங்கியது என்னவோ தேர்தல் கமிஷன்தான். தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் தில்லுமுல்லு வேலைகள் தவிடுபொடியாகிப் போனது. மேலும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் மக்களிடம் எழுந்த இந்த மவுனப் புரட்சி ஆகியவையே வாக்கு பதிவு சதவீத உயர்வுக்கு காரணமாக அமைந்ததால் இந்த தேர்தல் முடிவு தி.மு.கவுக்கு சாதகமாக இருக்காது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
சுபான்ஷு சுக்லா 14-ம் தேதி பூமி திரும்புகிறார் - நாசா அறிவிப்பு
11 Jul 2025புதுடெல்லி : சுபான்ஷு சுக்லா வருகிற 14-ந்தேதி பூமி திரும்புகிறார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு 2,300 பேர் உயிரிழப்பு
11 Jul 2025பாரீஸ் : ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.