எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : பிரபல பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
கர்நாடக மாநிலம் ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாசராவ் - கவுசல்யா தேவி தம்பதிக்கு மகளாக 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பிறந்தவர் ஜமுனா. இவர் சிறு வயதாக இருந்த போதே அவரது தந்தை ஆந்திர மாநிலம் தெனாலிக்கு அருகில் உள்ள துக்கிரலா என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். அதனால் பள்ளி நாட்களிலேயே பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார் ஜமுனா.
பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜமுனா, தமிழ், கன்னடம், மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மட்டும் அல்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 1953-ம் ஆண்டு வெளியான புட்டிலு என்ற தெலுங்கு படம் மூலமாக நடிகையான அறிமுகமானார்.
பின்னர் மிஸ்சியம்மா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் தங்கமலை ரகசியம், நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு, மருத நாட்டு வீரன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, மனிதன் மாறவில்லை, தூங்காதே தம்பி தூங்காதே, பூமி கல்யாணம், மிஸ்ஸம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
1980-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த ஜமுனா ராஜமுந்திரி மக்களவை தொகுதியில் 1989-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1990-களில் பா.ஜ.க.வில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


