எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அகமதாபாத் : வைடு, நோபாலுக்கு டிஆர்எஸ் உள்ளிட்ட ஐ.பி.எல். தொடரில் இம்முறை 5 புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன.
ஐ.பி.எல். திருவிழா...
பெரும் எதிர்பார்க்கப்பட்ட 16வது ஐ.பி.எல். சீசன் நேற்று அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்நிலையில், இந்த வருட ஐ.பி.எல். தொடரில் புதியதாக 5 விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
விதி 1: 'வீரர்கள் பட்டியல்':-
வழக்கமாக டாஸ் சுண்டுவதற்கு முன்பாக விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை நடுவரிடம் கொடுக்க வேண்டும். ஆனால் ஐ.பி.எல். தொடரில் இம்முறை டாஸ் சுண்டிய பின்னர் பிறகு அதற்கு தகுந்தபடி விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய விதிமுறை அறிமுகம் ஆகிறது. மற்றொரு திருப்பமாக நடுவரிடம் விளையாடும் 11 வீரர்களின் பட்டியலை வழங்கிய பின்னரும் மாற்றம் செய்யலாம். ஆனால் இதற்கு எதிரணியின் கேப்டன் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
விதி 2: 'வைடு, நோபாலுக்கு டிஆர்எஸ்':-
கள நடுவர் வழங்கும் வைடு, நோ-பால் ஆகியவற்றை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இந்த விதிமுறை சமீபத்தில் முடிவடைந்த பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இது ஐ.பி.எல். தொடரிலும் அறிமுகம் ஆகிறது.
விதி 3: 'நகர்ந்தால் 5 ரன் ':-
பேட்ஸ்மேன்கள் பந்தை அடிப்பதற்கு முன்னரே அவர்களது நகர்வுகளை கணித்து அதற்கு தகுந்தவாறு விக்கெட் கீப்பர் இடது புறமோ அல்லது வலது புறமோ சற்று நகர்வார். இதற்கு தற்போது அபராதம் விதிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பரின் நகர்வுகள் விதிமுறைக்கு மாறாக இருப்பதை களநடுவர் கண்டறிந்தால் பந்தை டெட்பால் என அறிவிக்கலாம். அல்லது வைடு என்றோ, நோபால் என்றோ அறிவித்து ஒரு ரன்னை அபராதமாக விதிக்கலாம். இல்லையென்றால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்களை கொடுக்கலாம்.
விதி 4: நேரத்தை வீண் செய்தால்':-
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களையும் 90 நிமிடங்களுக்குள் வீசி முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஓவரையும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் வீசி முடிக்க வேண்டும். இல்லையென்றால் வெளிவட்டத்துக்குள் 5 பீல்டர்களுக்கு பதிலாக 4 பீல்டர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். இது இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக இருக்கக்கூடும்.
விதி 5: 'இம்பேக்ட் பிளேயர்':-
ஐ.பி.எல். தொடரில் முறை 'இம்பேக்ட் பிளேயர்' என்ற புதிய விதியும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி டாஸ் வென்ற பின் வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன் மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ, அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
களமிறக்க முடியாது...
இந்த வகையில் ஏற்கெனவே 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் கீழ் வெளிநாட்டு வீரரை களமிறக்க முடியாது. இதனால் இந்திய வீரரரைதான் களமிறக்க முடியும். அதேவேளையில் களத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் புதிய விதிமுறையின்படி மற்றொரு வெளிநாட்டு வீரரை களமிறக்கலாம். மாற்று வீரராக வெளியே செல்பவர் மீண்டும் தனது பங்களிப்பை வழங்க முடியாது. இந்த 5 விதிமுறைகள் இந்த வருட ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாக உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து
21 Sep 2025புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்
21 Sep 2025திருவனந்தபுரம் : தனக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
தாலிபான்கள் பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும்: ட்ரம்ப்
21 Sep 2025நியூயார்க் : ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.