எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.27 - ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை தருவதற்கு வசதியாக, முதலமைச்சர் கருணாநிதி தானே முன்வந்து பதவி விலக வேண்டும், அல்லது இந்திய அரசு தலையிட்டு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக அதன் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடி மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.
ஒவ்வொரு முறையும் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அவ்வப்போது அரசியல் கட்சிகள் இடைநீnullக்கம் செய்வதும், அதற்குப் பிறகு அந்த வழக்குகள் என்ன ஆயின என்பதும் இதுவரையில் புரியாத புதிராகவே உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வயதாகி இறந்துள்ளார்களே தவிர, தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றதாக வரலாறு இல்லை.
சான்றாக 1991-1996 வரை தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சுக்ராமின் படுக்கையிலிருந்து பல கோடி ரூபாய்கள் பணமாகவே கைப்பற்றப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு, அந்த தண்டனையையும் எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். இன்னும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவருக்கு தற்போது 84 வயதாகிறது. அதைப் போல் ஆகிவிடக் கூடாது. அந்த அளவுக்கு ஊழல் வழக்குகளில் காலதாமதம் நீnullடிப்பதுதான் வரலாறு.
ஊழல் குற்றம் சாட்டப்பட்டவுடன், ஊழல் செய்து அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும், சேமிப்பு மற்றும் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களையும் உடனடியாக இந்திய அரசு முடக்கி வைக்க வேண்டும். தொலைபேசி கட்டணம் செலுத்தவில்லை என்றால் தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வருமான வரி சோதனை என்றால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்கு இத்தகைய உடனடி தண்டனையை வழங்குகிற மத்திய, மாநில அரசுகள் ஊழல் புரிந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கிகளிலும், நிலங்களிலும், கட்டிடங்களிலும், கம்பெனி பங்குகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் போட்டு வைத்திருப்பதை உடனடியாக ஏன் முடக்கக் கூடாது என்பதே எனது கேள்வி.
அவற்றை அப்படியே விட்டு வைப்பதால் அந்த ஊழல் பணத்தைக் கொண்டு பெரிய பெரிய வக்கீல்களை நியமித்து வழக்குகளில் காலதாமதம் செய்கின்றனர் அல்லது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்குகளை முடக்கிப் போடுகின்றனர். அந்த ஊழல் பணத்தை வைத்து தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்து அதிகாரத்தையும் கைப்பற்றுகின்றனர். ஜனநாயகமே ஊழல்நாயகமாக ஆகிவிடுவதை இந்திய அரசு ஏன் தடுக்கவில்லை.
ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு மேல் இந்திய அரசுக்கு வருவாய் இழப்பை தந்த 2ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய மந்திரியாக இருந்த ராஜா மீது மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியது. மத்திய மந்திரி பதவியில் அவர் தொடர்ந்து இருந்தால் அவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி புலன் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்த முடியும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர். ஆகவே வேறு வழியின்றி மத்திய மந்திரி பதவியில் இருந்து ராஜா விலக நேர்ந்தது. இன்று முக்கிய குற்றவாளியாக டெல்லியில் திகார் சிறையில் இருக்கிறார்.
இந்த ஊழல் பணத்தில் ரூபாய் 214 கோடி கலைஞர் டிவி ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மத்திய புலனாய்வுத் துறை நேற்றைய தினம் உச்சnullநீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி., இதில் கூட்டுச் சதியாளர் என்று கூறப்பட்டுள்ளார்.
கருணாநிதியின் 2வது மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவியில் 60 சதவிகிதப் பங்கு வகித்தும் கூட அவரை மத்திய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டில் சேர்க்கவில்லை. அவரை இயங்காத பங்குதாரர் என்று கூறி மத்திய புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை. 20 சதவிகிதப் பங்கினை பெற்றுள்ள கனிமொழி எம்.பி., சரத்குமார் ரெட்டி ஆகியோர் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளபோது, அதைப் போல மும்மடங்கான 60 சதவிகித பெரும்பான்மை பங்கு வகிக்கும் தயாளு அம்மையாரையும் முறைப்படி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா? சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே. இங்கே சட்டம் இருட்டறையில் போய் ஒளிந்து கொண்டதா?
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் எந்த அதிகார பொறுப்பிலும் இல்லை. அப்பொழுதுதான் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு அதனுடைய கடந்த கால இலாபக் கணக்கை பார்க்காமல் ரூபாய் 214 கோடி கொடுக்க முன் வந்தார்கள் என்பது கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிற கதைதான்.
ஆகவே இந்தப் பணம் மத்திய புலனாய்வுத் துறை சொல்வதைப் போல ஊழல் பணம் என்பதும், இந்தப் பணத்தை முதலமைச்சர் கருணாநிதி நேரில் கொடுத்து கலைஞர் டி.வி.யில் அவரை பங்குதாரராக முதலமைச்சர் என்ற காரணத்தால் போட முடியாததாலேயே கருணாநிதியின் பினாமியான தயாளு அம்மையாருக்கு தரப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். ஆகவே இந்தப் பண பரிமாற்றம் கருணாநிதிக்கு நேராக தரப்பட்டுள்ளது என்று கருதுவதே பொருத்தமானது.
எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் ராஜா நீnullடித்தால் இந்த இமாலய ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுமோ, அதே போன்று கலைஞர் டிவி மீது இந்த ரூபாய் 214 கோடி தரப்பட்டுள்ள வழக்கு பாய்வதால் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக nullநீடிப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், ஊழல் விசாரணை தொடர்வதற்கும், ஊழல் பேர்வழிகளை கண்டறிந்து உடனடியாக தண்டனை தருவதற்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி இந்த இமாலய ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீnullதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சராக உள்ள கருணாநிதி, முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது இந்திய அரசு மக்கள் நலனையும், சட்டத்தின் ஆட்சியையும் கருத்தில் கொண்டு nullநீதியை நிலைநாட்ட கருணாநிதி அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர் அன்று. பேராசையே பெரும் துன்பம் என்று நிரூபிக்கப்படுகிறது இன்று.இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
காசா: நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
16 Jul 2025டெல் அவிவ், காசாவில் நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் ஏற்பட்டது. அப்போது 20 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்- 4 இந்திய நகரங்களுக்கு இடம்
16 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் தரவரிசையில் 4 நகரங்கள் இடம் பெற்றது.
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மருத்துவக்கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக அரசு அறிவிப்பு
16 Jul 2025சென்னை, நீர் நிலைகள், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் ஜூலை 8ம் தேதி முதல் சட்டத் திருத்தம் அ
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் 19-ம் தேதி ஆன்லைன் மூலம் வெளியீடு
16 Jul 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் வருகிற 19-ம் தேதி ஆன்லைனில் வெளியீடு
-
அமெரிக்காவில் திடீர் கனமழை
16 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பெய்த கனமழைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ள பெறுக்கு ஏற்பட்டுள்ளது.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.